தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னை நகைக்கடையில் 9 கிலோ தங்க வைர நகைகள் கொள்ளை- 9 தனிப்படைகள் அமைத்து சோதனை

சென்னை நகைக்கடையில் 9 கிலோ தங்க வைர நகைகள் கொள்ளை- 9 தனிப்படைகள் அமைத்து சோதனை

Feb 10, 2023, 12:02 PM IST

சென்னையில் ஜே.எல் கோல்டு பேலஸ் கடையில் சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் ஜே.எல் கோல்டு பேலஸ் கடையில் சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் ஜே.எல் கோல்டு பேலஸ் கடையில் சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றில் 9 கிலோ அளவிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..இந்த 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான ஜே.எல்.கோல்டு பேலஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு ஸ்ரீதரின் நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் மெஷினால் வெட்டி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதில் நகைக்கடையில் இருந்த சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர் இன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் நகைக்கடை கொள்ளை குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய நிலையில் ஒரு கிராம் தங்கம் விலை மார்க்கெட்டில் சுமார் 43000வரை விற்பனை செய்யப்படும் நிலையில் பலகோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நகைக்கடையில் 3 மாதமாக காவலர்கள் இல்லை என தெரியவந்தள்ளது. 

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த நகைக்கடை கொள்ளை குறித்து விசாரிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி