தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பகீர்.. கணவரை விட்டு என் கூட வா..மறுத்த பெண்ணை உயிரோடு தீயிட்டு கொழுத்திய நபர்!

பகீர்.. கணவரை விட்டு என் கூட வா..மறுத்த பெண்ணை உயிரோடு தீயிட்டு கொழுத்திய நபர்!

Divya Sekar HT Tamil

Feb 25, 2023, 01:47 PM IST

Puducherry : கணவரை விட்டு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை உயிரோடு தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Puducherry : கணவரை விட்டு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை உயிரோடு தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Puducherry : கணவரை விட்டு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை உயிரோடு தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி : தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

திருமணத்துக்கு முன்பே சித்ராவுக்கு அவரது சொந்த ஊரான பச்சையாங்குப்பத்தை சேர்ந்த பாலு என்பவருடன் பழக்கம் இருந்து வந்தது. அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இவர்களது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது சித்ராவும், பாலுவும் உடலில் தீ பற்றி எரிந்த நிலையில் கத்தியுள்ளனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், பாலுவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால் பாலு அடிக்கடி சித்ரா வீட்டுக்கு வந்து செல்வார். அவரது குழந்தையை சித்ரா பராமரித்து வந்தார். சமீப காலமாக பாலு தினமும் சென்டரிங் வேலை செய்து விட்டு சித்ரா வீட்டிலேயே தங்கி விடுவார். இதற்கு சித்ராவின் கணவரும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சித்ரா வீட்டுக்கு வந்த பாலு கணவரை விட்டு தன்னுடன் வருமாறு சித்ராவை அழைத்தார். இதற்கு சித்ரா சம்மதிக்கவில்லை. கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு வரமாட்டேன் என்று உறுதியாக கூறினார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலு பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை சித்ராவின் உடலில் ஊற்றி தீவைத்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா பாலுவை வீட்டில் இருந்து வெளியே செல்ல விடாமல் அவரை கட்டியணைத்தார். இதில் இருவரும் தீயில் கருகியது தெதியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி