தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பயங்கரம்.. மனைவியுடன் பழக்கம் - இளைஞரை 15 துண்டுகளாக கூறுபோட்ட ஆட்டோ டிரைவர்!

பயங்கரம்.. மனைவியுடன் பழக்கம் - இளைஞரை 15 துண்டுகளாக கூறுபோட்ட ஆட்டோ டிரைவர்!

Divya Sekar HT Tamil

Jan 22, 2023, 11:56 AM IST

Delhi Murder : தில்லியில் ஆட்டோ டிரைவர் இளைஞரை கொன்று 15 துண்டுகளாக வெட்டி குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Delhi Murder : தில்லியில் ஆட்டோ டிரைவர் இளைஞரை கொன்று 15 துண்டுகளாக வெட்டி குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Murder : தில்லியில் ஆட்டோ டிரைவர் இளைஞரை கொன்று 15 துண்டுகளாக வெட்டி குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி : காசியாபாத் நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மீலால் பிரஜாபதி (40). அதே பகுதியில் வசித்து வருபவர் அக்ஷய் குமார் (23). அக்ஷய் குமார் மீலால் பிரஜாபதியின் மனைவியுடன் பழகி வந்துள்ளார். இதனை மீலால் பிரஜாபதி கண்டித்தார். அதன்பிறகும் அக்ஷய் குமார் அடிக்கடி பிரஜாபதியின் மனைவியுடன் பழகியதாக கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Sushil Kumar Modi dies: பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி காலமானார்-கண்கலங்கிய மத்திய அமைச்சர்!

Kurkure craving sparks divorce:‘குர்குரே வாங்கித் தரல’-கணவரிடம் விவாகரத்து கோரிய பெண்

HBD Mark Zuckerberg: ‘ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய ரிஸ்க்’- மார்க் ஜுக்கர்பெர்க் பிறந்த நாள் இன்று

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன

இதனால் அவர் அக்ஷய்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 19ஆம் தேதி பிரஜாபதியின் மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மகளை டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரஜாபதியின் மனைவி உடன் இருந்து குழந்தையை கவனித்து வந்தார்.

இதற்கிடையே தனது மனைவி மருத்துவமனையில் மகளுடன் இருப்பதால் வீட்டு வேலைக்கு உதவி செய்ய வருமாறு அக்ஷய் குமாரை பிரஜாபதி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு அவருக்கு சில குளிர்பானங்களை குடிக்க கொடுத்தார். சிறிது நேரத்தில் அக்ஷய் குமார் மயங்கி விழுந்ததும் அவரை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.

பின்னர் நள்ளிரவு நேரத்தில் உடல் துண்டுகளை 3 பைகளில் எடுத்து சென்று கோடா புஸ்டா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் வீசி உள்ளார். இந்நிலையில் நேற்று அங்கு குப்பைகளை தெரு நாய்கள் கிளறி கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்றவர்கள் உடல் துண்டுகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடல் பாகங்களின் 15 துண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டது அக்ஷய் குமார் என்பது தெரியவந்தது. ராஜஸ்தான் மாநிலம் கோட்புலி பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த நிலையில் தான் பிரஜாபதியின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பிரஜாபதியை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலை நடந்தபோது பிரஜாபதியின் மனைவி மகளுடன் மருத்துவமனையில் இருந்தார். எனவே அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. பிரஜாபதியின் வீட்டு உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் கொலைக்கான எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்ஷய் குமாரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் பிரஜாபதியின் இரண்டாவது மனைவி. அவருடன் ஒரு மைனர் மகள் மற்றும் அவரது முதல் திருமணத்தில் மேலும் மூன்று பேர் இருக்கின்றனர். நான்கு குழந்தைகளும் தம்பதியினருடன் அவர்களது கோடா வீட்டில் வசித்து வந்தனர்.

கொலை நடந்த அதே அறையில் குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கொலை நடந்த போது சம்பவயிடத்தில் இருந்த குழந்தைகளிடம் நாங்கள் இன்னும் பேசவில்லை. இந்தக்கொலையில் குழந்தைகளில் பதில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்து முழுவிவரமும் கண்டுப்பிடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி