தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Facebook Lover : பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்.. காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற திருமணமான இந்திய பெண்!

Facebook Lover : பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்.. காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற திருமணமான இந்திய பெண்!

Divya Sekar HT Tamil

Jul 24, 2023, 12:00 PM IST

திருமணம் முடிந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்கான பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமணம் முடிந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்கான பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமணம் முடிந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்கான பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேசம் கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (34). இவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் அரவிந்த். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணம் கைபர் பக்துன்வாவில் உள்ள அவரது ஆண் நண்பரை பார்க்க சென்றுள்ளார். அஞ்சு வாகா எல்லை வழியாக சட்டப்பூர்வமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

Blue Origin Space Tourism: ப்ளூ ஆர்ஜின் விண்வெளி பயணத்தில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி பைலட்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

அப்பர் திர் மாவட்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது பேஸ்புக் மூலமாக நஸ்ருல்லா (29) என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் மீது காதல் கொண்டதால், அவரை பார்க்க பாகிஸ்தான் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அனைத்தும் சரியாக உள்ளதால், அவரை போலீசார் விடுவித்துள்ளனர். அஞ்சு ஆரம்பத்தில் பாகிஸ்தான் போலீஸ் காவலில் இருந்தார், ஆனால் அவரது பயண ஆவணங்கள் மாவட்ட காவல்துறையால் சரிபார்க்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

தற்போது அஞ்சு பாகிஸ்தானில் உள்ளார். நஸ்ருல்லா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என அஞ்சு சொல்லி உள்ளதாகவும் அந்த நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளார். ஆனால், அஞ்சு பாகிஸ்தான் நாட்டை பார்ப்பதற்கு வந்துள்ளார் என நஸ்ருல்லாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாகவும் தகவல். எல்லை தாண்டி வந்த அஞ்சுவை விசாரிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த செய்தி வெளிவர ராஜஸ்தான் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரது கணவர் அரவிந்து கூறுகையில் ''அஞ்சு கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரிடம் செல்லுபடியான பாஸ்போர்ட் உள்ளது. 

தனது நண்பரை பார்க்க செல்வதாக சென்றார். இரண்டு நாட்களுக்கு முன் அவரிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினேன். அப்போது அவர் லாகூரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகார் ஏதும் செய்யவில்லை'' என்றார். அஞ்சுவிற்கு 15 வயதில் பெண் குழந்தையும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி