தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Onion Price:மகாராஷ்டிர சட்டசபைக்கு வெங்காய மாலைகளுடன் வந்த என்சிபி எம்எல்ஏக்கள்!

Onion price:மகாராஷ்டிர சட்டசபைக்கு வெங்காய மாலைகளுடன் வந்த என்சிபி எம்எல்ஏக்கள்!

Manigandan K T HT Tamil

Feb 28, 2023, 01:38 PM IST

Nationalist congress party: வெங்காயம் அதிக மகசூல் பெறுவதால், அதன் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. (ANI)
Nationalist congress party: வெங்காயம் அதிக மகசூல் பெறுவதால், அதன் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.

Nationalist congress party: வெங்காயம் அதிக மகசூல் பெறுவதால், அதன் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.

மகாராஷ்டிர சட்டசபைக்கு வெங்காய மாலைகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் வந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

வெங்காயம் அதிக மகசூல் பெறுவதால், அதன் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. விலை வீழ்ச்சியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் வெங்காய மாலைகளை கொண்டு வந்தனர்.

வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதால், வெங்காயத்திற்கு உரிய விலையை நிர்ணயிக்கக் கோரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) எம்எல்ஏக்கள், வெங்காயத்தை தலையில் சுமந்து கொண்டும், வெங்காய மாலை அணிவித்தும் செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரா சட்டசபைக்கு வந்தனர்.

முன்னதாக, வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை குறைந்ததால், விவசாயிகள் நாசிக்கின் லாசல்கான் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவில் (ஏபிஎம்சி) ஏலத்தை நிறுத்தினர்.

இதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக வெங்காய விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது.

வெங்காயத்தை சரியான விலைக்கு விற்க வேண்டும் என்று அந்த சங்கம் கோரிக்கை விடுத்தது. வெங்காயம் கிலோ 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் என குறைந்த விலையில் விற்கப்பட்டதால் ஏலத்தில் வெங்காயம் விற்பனை நிறுத்தப்பட்டது.

வெங்காயம் அதிக மகசூல் பெறுவதால், பிற மாநிலங்களிலும் அதன் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.

வெங்காயம் பயிரிட ஏக்கருக்கு 50,000 ரூபாய் செலவாகும் என்றும், ஏலத்தில் விற்கப்படும் விளைபொருட்களுக்கு 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை மட்டுமே வருமானம் ஈட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் நிலைக்கு வந்துள்ளனர். பிரதமர் மோடி அரசு விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மஹாராஷ்டிராவில் வெங்காயம் முக்கிய பணப் பயிராகும். மேலும் இது நாட்டின் மொத்த உற்பத்தியில் 35 முதல் 40 சதவிகிதம் ஆகும்.

வெங்காயம் மட்டுமின்றி மற்ற காய்கறிகளும் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், விவசாயிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஏவலா தாலுகா குசூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அம்பாதாஸ் சாஹெப்ராவ் நிகம் என்பவர் தனது பயிருக்கு நியாயமான விலை கிடைக்காததால், தனது கால்நடைகளுக்கு 10,000 ரூபாய் மதிப்புள்ள கத்தரிக்காயை அளித்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி