Kerala Crime : மீசை வினித் .. இன்ஸ்டா ரீல் மூலம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி .. மீண்டும் கைது செய்த போலீசார்!
Aug 27, 2023, 08:32 AM IST
இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் பிரபலமான மீசை வினீத் இளம் பெண்ணிடம் 6 சவரன் தங்க நகையை பெற்று ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களை வலையில் வீழ்த்தி வந்த வினீத் என்பவர் ஆறு சவரன் தங்க நகை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது நண்பரான கிளிமானூரைச் சேர்ந்த ஜித்து (22) என்பவரும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் வினீத் என்ற மீசை வினீத் (26). இன்ஸ்டாகிரம் பயன்படுத்தும் கேரள பெண்களுக்கு வினீத்தை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. வினீத் என்பதை விட மீசை வினீத் என்பதுதான் பெரிதும் அறியப்பட்ட பெயர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாகி தம்மை பின் தொடரும் இளம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்ஸ்டா மூலம் தொடர்பு ஏற்பட்ட பெண் ஒருவரிடம் 6 சவரன் தங்க நகையை அடகு வைத்ததுடன் அதனை திருப்பி கேட்ட பெண்ணை வீட்டுக்கு அழைத்து தாக்கியுள்ளார். இது குறித்து இளம் பெண் அளித்த புகாரின் பேரில் வினீத் கிளிமானூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக வினீத் இன்ஸ்டா மூலம் 22 வயது கல்லூரி மாணவியிடம் நீண்ட நாட்களாக நண்பர்களாக பேசி ஆசை வார்த்தைகள் கூறி பழக தொடங்கியுள்ளார். பின்னர் கொஞ்ம் கொஞ்சமாக தனது வலையில் வீழ்த்திய பின்னர் அவருடன் வீடியோ காலில் பேசியிருக்கிறார்.
வீடியோ காலில் ஆபாசமாக பேச தொடங்கி பின்னர் நிர்வாணமாக பேச தொடங்கியுள்ளார். இதனை அப்படியே தனது போனில் வினீத் ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறார். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த மாணவிக்கு போன் செய்து அழைத்திருக்கிறார்.
அதாவது வினீத் தான் தங்கியிருந்த லாட்ஜிக்கு மாணவியை வரவழைத்துள்ளார். அங்கு வைத்து மாணவியை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார்.வீடியோவை போட்டு காட்டியிருக்கிறார்.
தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை ஷேர் செய்துவிடுவேன் என்று மிரட்டிய வினீத் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மாணவி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வினீத்தை கைது செய்தனர்.
இதேபோல கடந்த மார்ச் 23ஆம் தேதி திருவனத்தபுரம் கனியாபுரம் பெட்ரோல் பங்க் மேனேஜர் கையில் பணத்துடன் அதனை வங்கியில் செலுத்த சென்றுக்கொண்டிருக்கும்போது சிலர் அவரை வழிமறித்து ரூ.2.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகள் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வழிப்பறி சம்பவத்தில் டிக்டாக் பிரபலம் வினீத் தனது நண்பர்களுடன் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
இவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். டிக்டாக் பிரபலம் தொடர்ச்சியாக இதுபோன்று குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள சம்பவம் கேரளாவில் பேசு பொருளாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்