தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime : 5 வருடகளாக தலித் சிறுமி கூட்டு பலாத்காரம்.. கொன்று விடுவதாக மிரட்டல்.. மருத்துவர்களால் வெளிவந்த உண்மை!

Crime : 5 வருடகளாக தலித் சிறுமி கூட்டு பலாத்காரம்.. கொன்று விடுவதாக மிரட்டல்.. மருத்துவர்களால் வெளிவந்த உண்மை!

Divya Sekar HT Tamil

Aug 01, 2023, 09:50 AM IST

தலித் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்த மூன்று இளைஞர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தலித் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்த மூன்று இளைஞர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தலித் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்த மூன்று இளைஞர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா பகு தியை சேர்ந்த சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். தலித் சமூகத்தை சேர்ந்த அந்த சிறுமியை 3 பேர் தொடர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

இதனால் பயந்துபோன சிறுமி இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை. இதனால் 3 பேரும் அந்த சிறுமியை தொடர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுமிக்கு திடீ ரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை அவளது பெற்றோர் விட்டலா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவளிடம் விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறி சிறுமி கதறி அழுதுள்ளாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விட்டலா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ மற்றும் தலித் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர்.

மேலும் விசாரணையில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே சிறு மியை அவர்கள் 3 பேரும் தொடர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக மூடபித்ரியை சேர்ந்த பெயிண்டரர் அக்ஷய் தேவடிகா (25), பேயாறு பகுதியை சேர்ந்த மேஸ்திரி கமலாக்ஷா (30), பேரிப்டாவை சேர்ந்த கார் டிரைவர் சுகுமார் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி