தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime : ஷாக்.. பட்டியலின சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு.. 3 நாட்களுக்குப் பிறகு கால்வாயில் மீட்கப்பட்ட உடல்!

Crime : ஷாக்.. பட்டியலின சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு.. 3 நாட்களுக்குப் பிறகு கால்வாயில் மீட்கப்பட்ட உடல்!

Divya Sekar HT Tamil

Jul 25, 2023, 10:18 AM IST

ஆந்திராவில் பட்டியலின சிறுமியை காதலிப்பதாகக் கூறி கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு கால்வாயில் சிறுமியின் உடல் மீட்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் பட்டியலின சிறுமியை காதலிப்பதாகக் கூறி கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு கால்வாயில் சிறுமியின் உடல் மீட்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் பட்டியலின சிறுமியை காதலிப்பதாகக் கூறி கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு கால்வாயில் சிறுமியின் உடல் மீட்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின சிறுமி (14) ஒருவர், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி இருக்கும் தெருவுக்கு அடிக்கடி வரும் லோகேஷ் என்பவர் தான் உன்னை காதலிப்பதாக சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இம்மாதம் ஜூலை 20ஆம் தேதி சிறுமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

அப்போது நாம் இருவரும் தனியாக வெளியே செல்லலாம் எனக் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியும் பள்ளிக்கு செல்வதாகக் கூறி வெளியே வந்துள்ளார். மேலும், தனது பள்ளி பையை பள்ளிக்கூடத்திற்கு வெளியிலேயே வைத்து லோகேஷ் உடன் சென்றுள்ளார்.

லோகேஷ் சிறுமியை தனியார் லாட்ஜ்க்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது உறவினரான நரேந்திரனை அழைத்துள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

பின்னர் சிறுமியை மீண்டும் அழைத்து வந்து அவரின் வீட்டின் அருகில் இறக்கிவிட்டு லோகேஷ் சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமியின் பை பள்ளிக்கு வெளியே வைத்திருந்ததை பார்த்த பள்ளியின் வாட்ச்மேன் தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் விசாரித்து சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் லோகேஷ் சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது. அவரிடம் கேட்கையில் சிறுமையை வீட்டில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார். ஆனால் சிறுமி இரவு ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

பின்னர் சிறுமியின் பெற்றோர் பால்மேரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லோகேஷ் மற்றும் நரேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சிறுமியை வீட்டின் அருகே இறக்கி விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தனர். இதனிடையே, 3 நாட்களுக்கு பிறகு மொவ்வா மண்டலம் சூரசனிப்பள்ளி பயிர் கால்வாயில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மன உளைச்சல் காரணமாக கால்வாயில் சிறுமி குதித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கூட்டுப் பாலியல் வன்புணர்வு, தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்சி மற்றும் எஸ்டி தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி