Crime : கொடூரம்.. நாயை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் துடித்துடித்த நாய்.. ஷாக் வீடியோ!
Oct 28, 2023, 08:38 AM IST
நாயை பாலியல் வன்புணர்வு செய்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதி உள்ளது. இங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயது இளைஞர் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் அவர் வசிக்கும் 3ஆவது மாடியில் இருந்து நாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. பக்கத்து வீட்டார் வந்து பார்த்த போது அந்த இளைஞர் நாயை பாலியல் வன்புணர்வு செய்து கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார்.
இதனால் பதறிபோன அந்த நபர் நாயை மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நாயைப் பார்த்த போது அது ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்தது. பின்னர் அந்த இளைஞர் மீது அக்கம்பக்கத்தினர் போலீசார் புகார் அளித்தனர்.
பின்னர் படுகாயம் அடைந்த நாயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து அந்த இளைஞர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-ன் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் கிரேட்டர் நொய்டா பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்