தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  குஜராத் மருத்துவர் தற்கொலை குறிப்பில் பாஜக எம்பியின் பெயர் – போலீஸ் தகவல்

குஜராத் மருத்துவர் தற்கொலை குறிப்பில் பாஜக எம்பியின் பெயர் – போலீஸ் தகவல்

Priyadarshini R HT Tamil

Feb 14, 2023, 01:18 PM IST

Gujarath Dr. Suicide: வேரவாலில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்து நிலையில் கிடந்தார் மருத்துவர். அவர் மருத்துவமனை நடத்தும் கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் இறந்து கிடந்தார். அவரது உடலை அவரிடம் வேலை செய்பவர்தான் முதலில் பார்த்தார்.
Gujarath Dr. Suicide: வேரவாலில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்து நிலையில் கிடந்தார் மருத்துவர். அவர் மருத்துவமனை நடத்தும் கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் இறந்து கிடந்தார். அவரது உடலை அவரிடம் வேலை செய்பவர்தான் முதலில் பார்த்தார்.

Gujarath Dr. Suicide: வேரவாலில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்து நிலையில் கிடந்தார் மருத்துவர். அவர் மருத்துவமனை நடத்தும் கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் இறந்து கிடந்தார். அவரது உடலை அவரிடம் வேலை செய்பவர்தான் முதலில் பார்த்தார்.

59 வயதான மருத்துவரின் தற்கொலை குறித்து குஜராத் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். மருத்துவரின் தற்கொலை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பெயர்கள் பாஜகவின் லோக்சபா எம்பி ராஜேஷ் சுதாசாமா மற்றும் அவரது தந்தை நரேன் சுதாசாமாதானா என்பதை உறுதிப்படுத்த முயற்சி செய்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

வேரவாலில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்து நிலையில் கிடந்தார் மருத்துவர். அவர் மருத்துவமனை நடத்தும் கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் இறந்து கிடந்தார். அவரது உடலை அவரிடம் வேலை செய்பவர்தான் முதலில் பார்த்தார். அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து குஜராத்திகள் கண்டெடுத்த, ஒரே ஒரு வரியில் எழுதியுள்ள தற்கொலை குறிப்பில், அவரது தற்கொலைக்கு ராஜேஷ் மற்றும் நரேன் ஆகியோர் பெயரை குறிப்பிட்டிருந்தார் என்று வேராவல் டிஎஸ்பி எம்யூ. மாசி தெரிவித்தார். 

மருத்துவரின் உறவினர் கூறுகையில், மருத்துவர் தனது தற்கொலை குறிப்பில் குறிப்பிட்டுள்ள ராஜேஷ் சுதாசாமா, ஜீனாகாத் கிர் சோம்நாத்தின் எம்பி மற்றும் அவரது தந்தை என்று கூறுகின்றனர். 

“நாங்கள் இந்த விஷயம் குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம். அந்த தற்கொலை குறிப்பில் அந்த பெயர் குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. நாங்கள் தற்போது எதிர்பாராத மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும் கையெழுத்து நிபுணரிடம் இந்த தற்கொலை குறிப்பை காட்டியுள்ளோம்“ என்று மாசி மேலும் கூறினார். பலமுறை முயற்சித்தும் ராஜேசை தொடர்புகொள்ள முடியவில்லை.

இறந்த மருத்துவரின் நண்பர் மருத்துவர் ஜல்பன் ரூபபரா கூறுகையில், நாங்கள் இருவரும் அவர்கள் இருவருக்கும் ரூ.2 முதல் ரூ.2.5 கோடி பணம் கொடுத்திருந்தோம். “எனக்கு மருத்துவரை இரண்டு ஆண்டுகளாக நெருக்கமாக தெரியும். அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறினார். அவரது பணத்தை ராஜேசும் அவரது தற்தையும் திருப்பி கொடுக்காததால் ஏற்பட்டதே இந்த மன உளைச்சல் என்று கூறினார். மருத்துவர் குறிப்பிட்டுள்ள இரு பெயர்களும் அந்த தந்தை-மகன்தான் என்பது எனக்கு தெரியும்“ அவர் கூறினார்.  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி