தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala Girl: கதறி அலறிய மாணவி.. கண்ட இடத்தில் கை வைத்த ஆட்டோ ஓட்டுநர்..!

Kerala Girl: கதறி அலறிய மாணவி.. கண்ட இடத்தில் கை வைத்த ஆட்டோ ஓட்டுநர்..!

Aug 03, 2023, 07:44 AM IST

கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அது மட்டும் இல்லாமல் வயது முதிர்ந்த பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

பாலியல் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறையா வண்ணம் நடந்து வருகின்றன. ஜாதி மத சிக்கல்களால் நடக்கக்கூடிய பாலியல் வன்கொடுமைகள் ஒரு பக்கம் இருக்க, பள்ளி குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த பெண்களைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கின்றனர்.

குறிப்பாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை தாக்கமானது மிகவும் அதிகமாக உள்ளது. அப்படி ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் நடந்துள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி ஒருவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். பள்ளிக்கு வழக்கமாகச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர் வராத காரணத்தினால் அவருக்குப் பதிலாக வேறொரு ஆட்டோ ஓட்டுநர் வந்துள்ளார்.

அப்போது அந்த ஆட்டோவில் பள்ளி மாணவி தனியாக வந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த மாணவியிடம் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் ரீதியாகச் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சத்தம் போட்டு அலறி கூச்சலிட்டுள்ளார். அந்த சிறுமி கதறி அழுவதை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர் சிலர் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து ஆட்டோவில் இருந்த மாணவியரிடம் பொதுமக்கள் விசாரித்த போது, தன்னிடம் இந்த ஆட்டோ ஓட்டுநர் தவறாக நடந்து கொள்வதாக அந்த மாணவி பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார். உடனே பொதுமக்கள் அந்த ஆட்டோ ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கி உள்ளனர் பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பாலக்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டோவில் மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களிடத்தில் இந்த சம்பவம் பெறும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

https://twitter.com/httamilnews

 

https://www.facebook.com/HTTamilNews

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி