தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: பாதாளத்தில் பாலியல்.. பலமுறை உறவு..14 ஆண்டுகள் டார்ச்சர் செய்த முதியவர்

Crime: பாதாளத்தில் பாலியல்.. பலமுறை உறவு..14 ஆண்டுகள் டார்ச்சர் செய்த முதியவர்

Aug 03, 2023, 09:07 AM IST

14 ஆண்டுகள் பாதாள அறையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
14 ஆண்டுகள் பாதாள அறையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

14 ஆண்டுகள் பாதாள அறையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண் ஒருவரை 14 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ய அடிமையாக வைத்திருந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்குச் சொந்தமான இடத்தில் இருந்து பாலியல் தொடர்பான பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

ரஷ்யா செல்யாபிஸ்க் இப்பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான விளாடிமிர் செஸ்கிடோ. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இளம் வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று சிறையில் அடைத்துள்ளார். அந்தப் பெண்ணின் ரகசியம் இடத்தில் வைத்த அவர் ஆயிரம் முறைக்கு மேல் அவரோடு பாலியல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல 2011 ஆம் ஆண்டு மற்றொரு பெண்ணை இவர் கொலை செய்ததாகப் புகார் அளித்துள்ளது. பின்னர் அவரிடம் சிறையில் அடைபட்டுக் கிடந்த அந்த சிறுமி காவல் நிலையத்தில் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் செஸ்கிடோவை கைது செய்தனர். அந்த இளம் சிறுமி தப்பிச் செல்வதற்கு செஸ்கிடோவின் தாயார் உதவி செய்துள்ளார். சிறிய தவறுகளுக்குக் கூட என்னை அடித்து கொடூரமாகத் துன்புறுத்தியதாக அந்த இளம் சிறுமி கூறியுள்ளார்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட செஸ்கிடோவிடம் இருந்து பாலியல் விளையாட்டு பொம்மைகள் விலங்குகள் மற்றும் அது சார்ந்த புகைப்படங்கள், சிடிகள் எனப் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரது வீட்டின் பாதாள அறையில் அந்த இளம் சிறுமியைச் சிறை வைத்திருந்ததாக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர், 2009 ஆம் ஆண்டு அந்த இளம் சிறுமி கடத்தப்பட்ட போது அவருக்கு 19 வயதில் இருக்கும். மது அருந்துவதற்காக அழைத்து அப்படியே அந்த இளம் சிறுமியை செஸ்கிடோ கடத்தியுள்ளார். தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாகக் கொடுமை அனுபவித்து வந்த அந்த இளம் சிறுமியின் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

https://twitter.com/httamilnews

 

https://www.facebook.com/HTTamilNews

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி