தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  நண்பனின் காதலியை உல்லாசத்திற்கு அழைத்த இளைஞர்.. சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்!

நண்பனின் காதலியை உல்லாசத்திற்கு அழைத்த இளைஞர்.. சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்!

Divya Sekar HT Tamil

Feb 24, 2023, 02:09 PM IST

Andhra Murder : ஆந்திராவில் காதலியை உல்லாசத்துக்கு அழைத்த நண்பனை கடத்தி குத்திக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Andhra Murder : ஆந்திராவில் காதலியை உல்லாசத்துக்கு அழைத்த நண்பனை கடத்தி குத்திக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Andhra Murder : ஆந்திராவில் காதலியை உல்லாசத்துக்கு அழைத்த நண்பனை கடத்தி குத்திக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திரா : கர்னூல் மாவட்டம், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் கண்ணூரில் உள்ள கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். தினேஷ் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறார். காதலியுடன் தனிமையில் இருக்கும்போது அவரை தனது செல்போனில் ஆடையில்லாமல் நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

தினேஷின் நண்பர் முரளி கிருஷ்ணா (22) தினேஷின் செல்போனை வாங்கி பார்த்த போது காதலியின் வீடியோவை பார்த்து நண்பனின் காதலியின் நிர்வாண வீடியோக்களை தனது செல்போனுக்கு பதிவேற்றம் செய்து கொண்டார். இதையடுத்து தினேஷின் காதலிக்கு போன் செய்த முரளி கிருஷ்ணா தனது ஆசைக்கு இணங்க வேண்டும் மறுத்தால் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.

இச்சம்பவம் குறித்து இளம்பெண் தினேஷுக்கு தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ் முரளி கிருஷ்ணாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி தனது நண்பரான கிரண்குமாரை அணுகி நடந்த சம்பவங்களை தெரிவித்தார். 

இதையடுத்து கடந்த மாதம் 25ஆம் தேதி நண்பர் கிரண்குமாருடன், முரளி கிருஷ்ணா வீட்டிற்கு சென்று மது அருந்தலாம் என கூறி பைக்கில் வைத்து பஞ்சலிங்கா என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளி கிருஷ்ணாவை சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவயிடத்திலேயே முரளி கிருஷ்ணா உயிரிழந்தார்.

பின்னர் அவரின் சடலத்தை நிர்வாணமாக நன்னூறு சுங்கச்சாவடி அருகே உள்ள அந்திரி நீவா கால்வாயில் வீசினர்.மகனை வெகு நேரமாக காணவில்லை என்பதால் முரளி கிருஷ்ணா பெற்றோர் கர்னூல் தாலுகா போலீசில் கடந்த 16-ஆம் தேதி புகார் செய்தனர். முரளி கிருஷ்ணாவை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற தினேஷ் குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் நடந்ததை ஓப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் அவரது நண்பர் கிரண்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கால்வாயில் வீசப்பட்ட முரளி கிருஷ்ணாவின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி