தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime : புடவை கட்ட ஆசையாக கேட்ட சிறுமி.. வேண்டாம் என மறுத்த தாய்.. மாணவி எடுத்த விபரீத முடிவு!

Crime : புடவை கட்ட ஆசையாக கேட்ட சிறுமி.. வேண்டாம் என மறுத்த தாய்.. மாணவி எடுத்த விபரீத முடிவு!

Divya Sekar HT Tamil

Sep 23, 2023, 08:45 AM IST

புனேவில் புடவை அணிய தாய் மறுத்ததால் 7 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் புடவை அணிய தாய் மறுத்ததால் 7 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் புடவை அணிய தாய் மறுத்ததால் 7 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேஹு ரோடு பகுதியில் உள்ள சிவாஜி வித்யாலயாவில் மாணவி ஒருவர் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாணவி புடவை கட்ட வேண்டும் என்று தனது தாயிடம் கேட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Fact Check: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் வீடியோ? – உண்மைத்தன்மை என்ன?

Fact Check: என்னது.. இதுதான் பிரதமர் மோடியின் திருமண போட்டோவா.. வைரலாகி வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

FACT-CHECK : உணவு பரிமாறும் போது பிரதமர் மோடி வைத்திருந்த வாளி காலியாக இருந்ததா? வைரலாகும் புகைப்படம்.. உண்மை என்ன?

Fact Check: 2024ல் மோடி பிரதமராக்குவதற்கு ராகுல் காந்தி ஆதரவளித்ததாக பரவும் வீடியோவில் உண்மை உள்ளதா?

அதற்கு இந்த வயதில் புடவை எதற்கு என தாய் கண்டித்துள்ளார். ஆசையாக புடவை அணிய நினைத்து தாய் கட்டக்கூடாது என கண்டித்ததால் மாணவி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், மாணவி குளியல் அறைக்குச் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் மாணவி வெளியில் வரவில்லை. மேலும் குளியல் அறையில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் கதவைத் திறக்கச் சொல்லியுள்ளனர். ஆனால் மாணவி எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதனால் குளியல் அறையின் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது துப்பட்டாவில் தூக்கிட்ட நிலையில் மாணவி இருந்துள்ளார். இதைக் பார்த்து அவரது பெற்றோர் கதறித் துடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலை கட்ட தாய் அனுமதிக்காததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. 

தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி