தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tapiaco Kozhukattai : மரவள்ளிக்கிழங்கு இலை கொழுக்கட்டை! வித்யாசமான சுவையில் அசத்தும்!

Tapiaco Kozhukattai : மரவள்ளிக்கிழங்கு இலை கொழுக்கட்டை! வித்யாசமான சுவையில் அசத்தும்!

Priyadarshini R HT Tamil

Dec 12, 2023, 12:04 PM IST

Tapiaco Kozhukattai : மரவள்ளிக்கிழங்கு இலை கொழுக்கட்டை! வித்யாசமான சுவையில் அசத்தும்!
Tapiaco Kozhukattai : மரவள்ளிக்கிழங்கு இலை கொழுக்கட்டை! வித்யாசமான சுவையில் அசத்தும்!

Tapiaco Kozhukattai : மரவள்ளிக்கிழங்கு இலை கொழுக்கட்டை! வித்யாசமான சுவையில் அசத்தும்!

தேவையான பொருட்கள்

மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

வெல்லம் – ஒரு கப்

தேங்காய் – ஒரு கப் (துருவியது)

ஏலக்காய்ப்பொடி – ஒரு சிட்டிகை

வாழை இலை – சிறிய சதுரங்களாக நறுக்கியது – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் வெல்லம் மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லம் உருகி பாகு வந்தவுடன், அதில் தேங்காயை சேர்த்து பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஏலக்காய்ப்பொடி தூவி சிறிது நேரம் பிரட்டினால் நன்றாக திரண்டு வரும். இது பூரணத்து தேவையானது. இதை எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் மர வள்ளிக்கிழங்கை நன்றாக அலசிவிட்டு, தோல் சீவி கேரட் துருவும், கிரேட்டரில் வைத்து துருவிக்கொள்ள வேண்டும்.

பொதுவாகவே கிழங்கு வகைகள் மண்ணுக்கு அடியில் விளைபவை என்பதால், அவற்றை சாப்பிட உபயோகிக்கும் முன் நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கை அப்படியே வேக வைத்து சாப்பிடுவதற்கு யாரும் பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில், அது அவ்வளவு சுவை நிறைந்தது கிடையாது. ஆனால் மாவுச்சத்துக்கள் நிறைந்தது. அது ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டும்தான் கிடைக்கும் என்பதால், கட்டாயம் கிடைக்கும்போது சமைத்து சாப்பிட்டுவிடவேண்டும்.

துருவிய மரவள்ளிக்கிழங்கு, கொஞ்சம் ஈரப்பதத்துடன் இருக்கும். எனவே அதில் உள்ள பாலை கையால் கொஞ்சம் பிழிந்த எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பாலை அதிகமாகவும் பிழிந்து விடக்கூடாது. மரவ்ள்ளியில் உள்ள சொதசொதப்புத்தன்மை சிறிதளவு போனாலே போதும். அந்தளவு மட்டுமே பிழிந்துகொள்ள வேண்டும்.

மேலும் பிழிந்த அந்தப்பாலை வீணாக்க வேண்டாம். அதை நாம் தோசை மாவில் கலந்து தோசை சுடலாம். அந்த தோசை மிகவும் சுவை நிறைந்ததாக இருக்கும். தோசை நல்ல மொறு மொறுப்பாக வரும். எனவே அதை தோசை மாவில் கலந்துகொள்வது நல்லது.

இப்போது சதுரமாக வெட்டிய இலையில் முதலில் மரவள்ளியை பரப்பில், அடுத்து பூரணத்தை வைத்து, இலையை பிரிந்து விடாமடல மூடி வேண்டும். நீங்கள் அதை டூத்பிக் வைத்து, பின்னியும் வைக்கலாம்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து இட்லி தட்டில் வைத்து வேகவைத்து, எடுத்துக்கொள்ள வேண்டும். இலை இல்லாவிட்டால் கூட கவலையில்லை. ஏனெனில், அப்படியே கொழுக்கட்டை அச்சில் வைத்தும் செய்து வைக்கலாம்.

ஆனால் இலை பயன்படுத்தும்போது, வாழை இலையில் உள்ள நன்மைகள் அந்த கொழுக்கட்டையில் இறங்கிவிடும்.

வெந்தவுடன் எடுத்து, இலையிலிருந்து பிரிந்து சாப்பிட சுவை அள்ளும். வித்யாசமான சுவையில் இருக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து கொடுத்தால் பிடிக்கவே பிடிக்காது. எனவே இதுபோல் செய்துகொடுக்கும்போது அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி