தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Maravalli Kilangu Adai Dosai: மொறு மொறுன்னு மரவள்ளிக்கிழங்கு அடை அட்டகாசமான சுவையில்!

Maravalli Kilangu Adai Dosai: மொறு மொறுன்னு மரவள்ளிக்கிழங்கு அடை அட்டகாசமான சுவையில்!

Aug 02, 2023, 12:22 PM IST

அடை தோசை சாப்பிட நினைப்பவர்கள் அந்த கலவையில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு தோசையாக ஊற்றி எடுத்துக் கொள்ளலாம். இந்த தோசைக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தினால் ருசி அருமையாக இருக்கும். இந்த அடை தோசையுடன் தேங்காய் சட்னி அருமையான காமினேஷன்.
அடை தோசை சாப்பிட நினைப்பவர்கள் அந்த கலவையில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு தோசையாக ஊற்றி எடுத்துக் கொள்ளலாம். இந்த தோசைக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தினால் ருசி அருமையாக இருக்கும். இந்த அடை தோசையுடன் தேங்காய் சட்னி அருமையான காமினேஷன்.

அடை தோசை சாப்பிட நினைப்பவர்கள் அந்த கலவையில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு தோசையாக ஊற்றி எடுத்துக் கொள்ளலாம். இந்த தோசைக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தினால் ருசி அருமையாக இருக்கும். இந்த அடை தோசையுடன் தேங்காய் சட்னி அருமையான காமினேஷன்.

பொதுவாக இட்லி தோசை என ஒரே மாதிரி செய்து கொடுப்பதற்கு பதிலாக மொறு மொறுன்னு சுவையான இந்த மரவள்ளிக்கிழங்கு அடை தோசையை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

Diabetes Care : சர்க்கரை நோயால் அவதியா? கோதுமைக்கு பதில் என்ன சாப்பிடலாம்? இதோ ஆலோசனை!

தேவையான பொருட்கள்

ஒரு கப் இட்லி அரிசி

ஒரு கப் துவரம் பருப்பு

ஒரு கப் பாசி பருப்பு

ஒரு கப் உளுந்து

ஒரு கப் கடலை பருப்பு

மிளகாய் வத்தல்

சீரகம்

கறிவேப்பிலை

புளி

பூண்டு

உப்பு

பெருங்காயம்

வெங்காயம்

கறிவேப்பிலை

எண்ணெய்

கடுகு

செய்முறை

இட்லி அரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு, உளுந்து, என அனைத்தையும் நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும். 3 மணி நேரம் நன்றாக ஊறிய பின் இந்த அரிசி பருப்புகளை ஒன்றாக சேர்த்து கிரைண்டரில் அரைக்க வேண்டும். அதனுடன் தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்த மர வள்ளிக்கிழங்கையும் நறுக்கி அரிசி பருப்புடன் போட்டு போட்டு அரைக்க வேண்அரைக்கும் போது அதில் காரத்திற்கு ஏற்ப மிளகாய் வத்தல் மற்றும் சீரகம், பூண்டு, கறிவேப்பிலை ஒரு குட்டி நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்து எடுத்த மாவில் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து அரை மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் உளுந்தம் பருப்பை சேர்த்து நன்றாக பொரிந்த பின் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை அரைத்து வைத்த மாவில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

இப்போது இந்த மாவை விருப்பம் உடையவர்கள் கெட்டியாக அடை போல கை தட்டி தோசை கல்லில் நிறைய எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளலாம்.

இல்லை அடை தோசை சாப்பிட நினைப்பவர்கள் அந்த கலவையில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு தோசையாக ஊற்றி எடுத்துக் கொள்ளலாம். இந்த தோசைக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தினால் ருசி அருமையாக இருக்கும். இந்த அடை தோசையுடன் தேங்காய் சட்னி அருமையான காமினேஷன். அவியல் காரச்சட்னி, தக்காளி சட்னி என விருப்பத்திற்கு ஏற்ப எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரி விகிதத்தில் கலந்திருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி