Vairamuthu: எந்த வயதிலும் வரலாம் - வைரமுத்துவின் காதலர் ட்வீட்
Feb 14, 2023, 02:04 PM IST
கவிஞர் வைரமுத்துவின் காதலர் தின ட்வீட் வைரலாகி வருகிறது.
காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மக்கள் தங்களின் காதலை தங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு சொல்வார்கள். லெட்டர் காதல், டெலிபோன் காதல், எஸ்எம்எஸ் காதலை கடந்த தற்போது டிஜிட்டல் முறையில் காதலர்கள் காதலித்து வருகின்றனர்.
காதலர் தின கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்னரே தொடங்கிவிடுகிறது. முதலில் ரோஸ் டே எனப்படும் ரோஜா தினம், ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே , ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டேவை தொடர்ந்து தான் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் காதலர் தினத்திற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து கூறியுள்ளார். அதில், ”எந்த நிலையிலும் வரலாம் எந்த வயதிலும் வரலாம் அது ஒன்றல்ல ஒன்றிரண்டு மூன்று நான்கென்று எண்ணிக்கை ஏறலாம் ” எனப் பதிவிட்டு உள்ளார்.
எந்த நிலையிலும் வரலாம்
எந்த வயதிலும் வரலாம்
அது ஒன்றல்ல
ஒன்றிரண்டு மூன்று
நான்கென்று
எண்ணிக்கை ஏறலாம்
ஆனால்,
என்னதான் அது என்ற
இருதயத் துடிப்புக்கும்,
எப்போதுதான் நேரும் என்ற
உடலின் தவிப்புக்கும்
இடைவெளியில் நேருகின்ற
துன்பம் குழைத்த
இன்பம்தான் காதல்
அந்த
முதல் அனுபவம் வாழ்க “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.