தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thavamai Thavamirundhu: சீதா செய்யும் சமையல் ஆர்டரில் விஷத்தை கலந்த தணிகா- தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்

Thavamai Thavamirundhu: சீதா செய்யும் சமையல் ஆர்டரில் விஷத்தை கலந்த தணிகா- தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்

May 10, 2023, 11:44 AM IST

தணிகா தனது சூழ்ச்சி வேலையை காட்ட கடைசி நேரத்தில் மார்க் சரியான பதிலடி கொடுக்க உள்ளார்.
தணிகா தனது சூழ்ச்சி வேலையை காட்ட கடைசி நேரத்தில் மார்க் சரியான பதிலடி கொடுக்க உள்ளார்.

தணிகா தனது சூழ்ச்சி வேலையை காட்ட கடைசி நேரத்தில் மார்க் சரியான பதிலடி கொடுக்க உள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தவமாய் தவமிருந்து.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இந்த சீரியலில் பாண்டியின் வளைகாப்பு விழாவுக்காக சீதா சமையல் ஆர்டரை எடுத்திருக்க தணிகா சூழ்ச்சி செய்து சாவிரிதியை வைத்து விஷம் கலந்த எண்ணெய்யை சமையலுக்கான பொருட்களுக்குள் சேர்த்து வைக்கிறான்.

இதை பார்த்த சீதா என்ன செய்யறீங்க என கேட்க சாவித்திரி ஒரு வழியாக சமாளித்து சீதாவுடன் சேர்ந்து சமைக்கும் இடத்திற்கும் செல்கிறாள். அங்கு உதவியாட்கள் வராத காரணத்தினால் மார்க் மற்றும் பாண்டி சீதாவுக்கு சமைக்க உதவுகின்றனர். பாண்டியின் மாமா தனது பொண்ணுக்கு வளைகாப்பு நடக்குது, ஆனால் உங்கள் பொண்ணுக்கு இதெல்லாம் இன்னும் நடக்கல என பேசி அவமானப்படுத்துகிறார்.

பிறகு சாவித்திரி வைத்த எண்ணெய்யை எடுத்து சீதா சமையல் செய்ய சாவித்திரி அந்த விசயத்தை தனிகாவுக்கு தெரியப்படுத்த அவர் சந்தோசப்படுகிறார். அதன் பிறகு மார்க் மற்றும் பாண்டி டி கடையில் இருக்கும் போது சீதா வைத்த சாப்பாட்டை சாப்பிட்டு காகங்கள் இறந்து கீழே விழ இருவரும் பதறியடித்து உள்ளே ஓடி வர அதற்குள் எல்லாரும் சாப்பிட்டு விட்டு கிளம்பியது தெரிய வருகிறது.

மார்க் என்ன செய்வது என தெரியாமல் தவிக்க பாண்டியின் மாமா சாப்பாடு சரியில்லை என சண்டை போட்டுக்கிருக்க ஐயர் அங்கு வந்து சாப்பாடு மாறிடுச்சு என சொல்ல மார்க் நிம்மதி அடைகிறார். பிறகு விஷம் கலந்த சாப்பாட்டை சோதனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

வீட்டுக்கு வந்த சீதா மலர், பாண்டி சேர ஏதாவது வழி பண்ணுங்க என சொல்ல மார்க் ஒரு திட்டம் போடுகிறார். அந்த திட்டத்தின் படி மலர் பாண்டிக்காக ஓட்டல் கேஸை எடுத்து நடத்த முடிவெடுக்கிறாள். இதிலும் தணிகா தனது சூழ்ச்சி வேலையை காட்ட கடைசி நேரத்தில் மார்க் சரியான பதிலடி கொடுக்க உள்ளார். அப்படி நடக்க போவது என்ன? என்ற கோணத்தில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. எனவே தவமாய் தவமிருந்து சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி