தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Serial Actress: எனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது - நடிகை மகிழ்ச்சி

Serial Actress: எனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது - நடிகை மகிழ்ச்சி

Apr 08, 2023, 10:35 AM IST

சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு சின்னத்திரை நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செல்லமா இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் திவ்யா ஸ்ரீதர் மிகவும் பிரபலமானார்.

ட்ரெண்டிங் செய்திகள்

HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!

Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?

HBD Balu Mahendra: Dusky ஹீரோயின்களை கேமரா லென்ஸ்களின் வழியே அழகுற ரசிக்க வைத்த வித்தகர் பாலு மகேந்திரா

Manickam Narayanan: ‘எல்லாரும் சிவகுமார் மாதிரி வாழமுடியாது.. ஐஸ்வர்யா மீது பசங்களுக்கு பெரிசா பாசம் இல்ல’ - மாணிக்கம்

கர்நாடகாவைச் சேர்ந்த இந்த திவ்யா சமீபத்தில் கர்ப்பமாக இருக்கின்ற காரணத்தினால் இருந்து சற்று விலகி இருந்தார். தற்போது அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அர்னவ் என்பவரை நடிகை திவ்யா ஸ்ரீதர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் கேளடி கண்மணி என்று சீரியலில் நடித்தனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது.

திவ்யா ஸ்ரீதர் தன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆன பிறகு காதல் கணவரான அர்னவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகத் தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் அது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதற்குப் பிறகு நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் நடிகை திவ்யா ஸ்ரீதர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர், என்னிடம் பல பேர் இந்த குழந்தையைக் கலைக்கச் சொன்னார்கள். கடவுள் கொடுத்த உயிரை அழிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது எனத் தெரிவித்தேன். ஒருவேளை எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும். பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவனுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பேன்.

பிரசவத்துக்கு இன்னும் சில நாட்கள் இருந்தாலும், நான் இன்னும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். வருமானத்திற்கு வேறு வழி இல்லை, இந்த காரணத்தினால் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்குப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி