தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rakhi Sawant: ‘என் நிர்வாண வீடியோவை விற்பனை செய்தார்’ - கணவர் மீது ராக்கி புகார்

Rakhi Sawant: ‘என் நிர்வாண வீடியோவை விற்பனை செய்தார்’ - கணவர் மீது ராக்கி புகார்

Aarthi V HT Tamil

Feb 10, 2023, 02:05 PM IST

நடிகை ராக்கி சாவந்த் தன் கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.
நடிகை ராக்கி சாவந்த் தன் கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

நடிகை ராக்கி சாவந்த் தன் கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

இந்தி நடிகையான ராக்கி சாவந்த் தமிழில், என் சகியே, முத்திரை கம்பீரம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

HBD Balu Mahendra: Dusky ஹீரோயின்களை கேமரா லென்ஸ்களின் வழியே அழகுற ரசிக்க வைத்த வித்தகர் பாலு மகேந்திரா

Manickam Narayanan: ‘எல்லாரும் சிவகுமார் மாதிரி வாழமுடியாது.. ஐஸ்வர்யா மீது பசங்களுக்கு பெரிசா பாசம் இல்ல’ - மாணிக்கம்

Saindhavi gv Prakash: நடிகைகளுடன் படு நெருக்கம்.. ‘முதல்தடவை பார்த்தப்ப ரொம்ப கஷ்டமா போச்சு’ -சைந்தவி

30 Years of Jaihind : 90ஸ் கிட்ஸ்களுக்கு தேசப்பற்றை ஊட்டிய ‘ஜெய்ஹிந்த்’ 30 ஆண்டுகளிலும் மிரளவைக்கும் அர்ஜூனின் அதிரடி!

2022 ஆம் ஆண்டு மே மாதம் ராக்கி சாவந்த் மற்றும் ஆடில் கான் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி பல மாதங்களாகியதை அவர்கள் மறைத்து விட்டனர். கடந்த மாதம் தான் ஆதிலை திருமணம் செய்து கொண்டதாக ராக்கி அறிவித்தார்.

ராக்கி சாவந்துக்கும், அடிலுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. ஆதில் சும்மாயிருக்கு என்று சொன்னதால் ராக்கி திருமணத்தை யாரிடமும் சொல்லவில்லை போல.

அவர் கூறுகையில், “"நான் என் கதையை சொல்ல கோர்ட்டுக்கு வந்தேன். ஆதிலுக்கு ஜாமீன் கிடைக்க கூடாது. மருத்துவ பரிசோதனை செய்து அனைத்து ஆதாரங்களையும் ஓஷிவாரா காவல் நிலையத்தில் கொடுத்தேன். நீதி கேட்க நீதிபதியிடம் வந்தேன். என்னை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்துவிட்டார். 

அதனால் அவர் ஜாமீன் பெற முடியாது. நான் அவரிடம் எனது வங்கி  குறியீடு கொடுத்தேன். வங்கியில் இருந்து வரும் OTPயை வைத்து என்  பணத்தை எடுத்துவிட்டார். அவர் என் நம்பிக்கையை உடைத்து விட்டார்.

ஆதில் என்னை ஏமாற்றிவிட்டார். எனது நிர்வாண வீடியோக்களை எடுத்து சிலருக்கு விற்பனை செய்து உள்ளார். இந்த விவகாரம் தற்போது சைபர் க்ரைம் துறையிடம் உள்ளது. எங்கள் திருமணத்திற்குப் பிறகு, ஆதில் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். ராக்கி அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்” என்ரார்.

ராக்கி சாவந்திற்கு மிரட்டல்

ராக்கி கொடுத்த புகாரின் பேரில் ஆதில் கான் பிப்ரவரி 7ஆம் தேதி கைது செய்யப்பட்டார் . “ஆதில் கான் தொழிலதிபர் இல்லை, பாலிவுட்டில் நுழைய ஆசைப்பட்டார், ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். என்னை படிக்கல்லாக பயன்படுத்தினார். நான் தொழிலதிபர் என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து என் மீது லாரியை ஏற்ற சொன்னார். என் அம்மா சிகிச்சைக்கு கூட பணம் கொடுக்கவில்லை. முறையான சிகிச்சை பெற்றிருந்தால், அவர் உயிருடன் இருந்திருப்பார், ”என்று ராக்கி சாவந்த் புலம்பினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி