Rajini: ரஜினியின் காதலை நிராகரித்த பார்த்திபன்.. ரஜினி சீரியல் அப்டேட்
Feb 15, 2023, 11:59 AM IST
ரஜினி சிரீயலில் இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ரஜினி.
இந்த சீரியலில் கடந்த வாரம் ரஜினி மற்றும் அனிதா என இருவரும் ஒன்று சேர்ந்து வீட்டுக்கு வந்த நிலையில் ராதிகா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அண்ணாச்சி பார்த்திபனுக்கு வேலை கொடுக்கிறார். பிறகு ரஜினியின் பரிந்துரையால் தான் இந்த வேலை கிடைத்திருக்கிறது என தெரிய வர, பார்த்திபன் அந்த வேலையை வேண்டாம் என விட்டு விடுகிறான்.
அதன் பிறகு அனிதா ரஜினிக்கு ஆக்சிடண்ட் என பார்த்திபனுக்கும், பார்த்திபனுக்கு ஆக்சிடண்ட் என ரஜினிக்கும் கால் பண்ணி சொல்ல, பதறி அடித்து வந்த பார்த்திபன் என்னால ரஜினியோட காதலை இப்ப ஏத்துக்க முடியல என சொல்லி விட்டு செல்கிறான். ரஜினி என் காதலை புரிய வைக்கிறேன் என அனிதாவிடம் சொல்கிறாள்.
பிறகு ரஜினி வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என சொல்ல, அனைவரும் கோபமாகிறார்கள். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிங்கமுத்து வீட்டை விற்க அனைவரிடமும் சம்மதம் வாங்கி பத்திரத்தில் கையெழுத்து போட வைக்கிறான். ரஜினி எனக்கு சம்மதம் இல்லை என சொல்லி கையெழுத்து போட மறுக்கிறாள்.
இதனால் மாரிமுத்து 50 லட்சம் பணம் தருகிறேன் என பத்மாவை மூளைச்சலவை செய்ய, பத்மா தனது மகள் மீனாவின் காலேஜ் பார்மில் சைன் வேண்டும் என சொல்லி ரஜினியிடம் வீட்டு பத்திரத்தில் கையெழுத்து கேட்க ரஜினியும் உண்மை தெரியாமல் கையெழுத்து போடுகிறாள்.
இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? சிங்கமுத்துவின் திட்டத்தை ரஜினி வீழ்த்துவாளா? என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று காணலாம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்