தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naga Chaitanya: இந்திய ரேஸிங் லீக்..!ஹைதராபாத் மோட்டர் ஸ்போர்ட்ஸ் ரேஸிங் அணியை வாங்கிய நாக சைதன்யா

Naga Chaitanya: இந்திய ரேஸிங் லீக்..!ஹைதராபாத் மோட்டர் ஸ்போர்ட்ஸ் ரேஸிங் அணியை வாங்கிய நாக சைதன்யா

Sep 15, 2023, 11:56 AM IST

நடிப்பு தவிர விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவாராக இருந்து வரும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட மோட்டர் ஸ்போர்ட் ரேஸ் அணியை விலைக்கு வாங்கியுள்ளார்.
நடிப்பு தவிர விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவாராக இருந்து வரும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட மோட்டர் ஸ்போர்ட் ரேஸ் அணியை விலைக்கு வாங்கியுள்ளார்.

நடிப்பு தவிர விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவாராக இருந்து வரும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட மோட்டர் ஸ்போர்ட் ரேஸ் அணியை விலைக்கு வாங்கியுள்ளார்.

கோலிவுட்டில் அஜித்குமார் போல், தெலுங்கு சினிமாவில் ரேஸ் போட்டிகள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவராக நடிகர் நாக சைதன்யா உள்ளார். இதையடுத்து ஹைதராபாத்தை மையமாக கொண்ட மோட்டர் ஸ்பொர்ட்ஸ் ரேஸ் அணியை விலைக்கு வாங்கியுள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

ஹைதராபாத் பிளாக் பேர்ட்ஸ் என்ற அந்த அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் பார்முலா 4 ரேஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ளது. 

"மோட்டார்ஸ்போர்ட்ஸில் ஒரு பகுதியாக எப்போது நான் இருக்க விரும்பியுள்ளேன். அந்த வகையில் ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தனிப்பட்ட முறையில், இந்தியா ரேஸிங் லீக், இந்தியா மோட்டார்ஸ்போர்ட்ஸில் முக்கிய பங்கு வகித்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்த சீசனில் ஸ்டீரிட் ரேஸ்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இது ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்."

இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்த வரும் நாக சைதன்யாவும், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் டாப் ஹீரோயினாக இருந்த சமந்தாவும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் 2017இல் திருமணம் செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் 2021இல் பிரிவதாக அறிவித்து, விவாகரத்தும் பெற்றனர். 

தற்போது நாக சைதன்யா, சமந்தா ஆகிய இருவரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

இதற்கிடையே நாக சைதன்யா, பொன்னியன் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரித்தில் தோன்றிய சோபிதாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் இதுபற்றி இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து நாக சைதன்யா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை தனது பெற்றார் பார்த்த பெண்ணை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அவரது திருமணத்துக்கான ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாக சைதன்யா இரண்டவதாக திருமணம் செய்துகொள்ள போகும் பெண் வீட்டார் பிஸ்னஸ் பின்னணியை கொண்டவர்களாம்.

அத்துடன் இந்த பெண்ணுக்கும், சினிமாவுக்கும் துளி அளவு கூட தொடர்பு இல்லை எனவும் சொல்லப்படுகிறது. விரைவில் நாக சைதன்யாவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி