தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meenakshi Ponnunga : பூஜாவிடம் சிக்கிய சரண்யாவின் கடிதம், ஷக்திக்கு ஷாக்!

Meenakshi Ponnunga : பூஜாவிடம் சிக்கிய சரண்யாவின் கடிதம், ஷக்திக்கு ஷாக்!

Divya Sekar HT Tamil

May 02, 2023, 11:49 AM IST

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் காண்போம்.
மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் காண்போம்.

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் காண்போம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

ட்ரெண்டிங் செய்திகள்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!

Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரண்யாவின் அறையில் ஒரு லெட்டர் இருக்க, அதை கணக்குப்பிள்ளை எடுத்து படித்துப் பார்க்க அதில் சரண்யா தான் கர்ப்பம் என்ற உண்மையைச் சொல்லி விட்டு வெளியேறுவதாக எழுதியிருக்கிறது.

பிறகு கணக்குப்பிள்ளை அந்த லெட்டரை கொண்டு வந்து சக்தியிடம் கொடுக்கிறார். சக்தி படித்து பார்த்துவிட்டு பதட்டம் அடைகிறாள் .

அதன் பிறகு ரங்கநாயகி சக்தியிடம் இருந்த லெட்டரை பார்த்து விட, என்ன என்று கேட்க கல்யாணத்திற்கு தேவையான பொருட்கள் எழுதி கொடுத்திருக்கிறார்கள், போய் வாங்க வேண்டும் என்று சொல்லி சமாளித்து விடுகிறாள்.

மண்டபத்தில் இருந்து வெளியே வந்த அவள் சக்தி ஆட்டோவில் ஏறி சரண்யாவை தேடி போகிறாள். வெற்றி கல்யாணத்துக்கு ரெடி ஆகாமல் சாதாரணமாக இருக்க ரங்கநாயகி அவனை அவசர படுத்தி டிரஸ் செய்ய சொல்கிறாள்.

அதனை தொடர்ந்து சரண்யா ஒரு சித்தரிடம் கர்ப்பம் கலைக்கும் மருந்தை வாங்கி குடிப்பதற்கு தயாராக இருக்க, அந்த நேரத்தில் சக்தி வந்து அதை தட்டி விட்டு புத்திமதி சொல்லி மீண்டும் கல்யாண மண்டபத்திற்கு அழைத்து செல்கிறாள்.

வழியில் காரில் நீதிமணி, யமுனா மற்றும் துர்காவும் வருகிறார்கள். நீதிமணி கல்யாணத்தை எப்படியும் நான் நிறுத்தி காட்டுகிறேன் பார் என்று சவால் விட்டபடி வருகிறான்.

இங்கே மண்டபத்தில் பூஜா சக்தியை ஏன் இவ்வளவு நேரம் காணவில்லை கல்யாணத்தை நிறுத்த அவள் ஏதோ ஒரு திட்டம் போடுகிறாள் என நினைத்து சரண்யாவின், ரூமில் இருந்த கடிதத்தை எடுத்து படித்து விடுகிறாள்.

லெட்டருடன் பூஜா மண்டபத்திற்குள் வர ரங்கநாயகி லெட்டரை பற்றி விசாரிக்க பூஜா அதிர்ச்சியுடன் இருக்க அப்பொழுது அங்கு சக்தி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

https://www.facebook.com/HTTamilNews 

https://www.youtube.com/@httamil 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி