தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maari Serial : சூர்யாவை வசியம் செய்த ஜாஸ்மின்.. மாரி செய்யப் போவது என்ன?

Maari serial : சூர்யாவை வசியம் செய்த ஜாஸ்மின்.. மாரி செய்யப் போவது என்ன?

Divya Sekar HT Tamil

May 02, 2023, 11:39 AM IST

மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இங்கு காணலாம்.
மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இங்கு காணலாம்.

மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இங்கு காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜாஸ்மின் சொன்னது போல ஸ்ரீஜா மற்றும் சங்கரபாண்டி இருவரும் சேர்ந்து துர்கா கையில் இருந்த காப்பை அகற்றி விடுகின்றனர். இதனால் ஜாஸ்மின் துர்காவை தனது கட்டுக்குள் கொண்டு வந்து அவள் மூலம் லட்டுவை சூர்யாவுக்கு கொடுக்க வைக்க சூர்யா குழந்தை கொடுப்பதால் வாங்கி சாப்பிட்டு விடுகிறான்.

அதன் பிறகு இரவில் எல்லோரும் தூங்கியதும் ஜாஸ்மின் சூர்யா மற்றும் துர்காவை தனது கட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை எழுப்பி தனது அருகே வர வைக்கிறாள். பிறகு இருவரையும் ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவளது ஆண்டவரை பார்க்க வருகிறாள்.

அங்கே ஜாஸ்மினின் குருஜி ஏற்கனவே கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வைத்திருக்க இருவரையும் மணமேடையில் உட்கார சொல்கிறார். இருவரும் உட்கார்ந்த பிறகு மாலை மாற்றிக்க சொல்ல இருவரும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். மேலும் பிரம்ம முகூர்த்தம் வந்ததும் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.

மறுபக்கம் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் மாரி திடீரென எழுந்து பார்க்க பக்கத்தில் சூர்யா மற்றும் துர்கா இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். வீடு முழுவதும் அவர்களை தேடி வர ஒரு இடத்தில் துர்காவின் காப்பு கழண்டு கிடப்பதை பார்த்து ஏதோ பெரிய பிரச்சனை என்பதை புரிந்து கொள்கிறாள்.

பிறகு தேவி அம்மாவை உதவிக்கு கூப்பிட ஏற்கனவே சாமியார் தேவியம்மா மற்றும் மாடத்தி அம்மனுக்கு கட்டு போட்டு விட்டதால் தேவி அம்மாவால் வீட்டுக்குள் வர முடியவில்லை. பிறகு மாரி மாடத்தி அம்மனிடம் வேண்ட மாடத்தி அம்மனும் வரவில்லை.

இதனால் மாரி வெளியே ஓடிவந்து ஹஸ்பண்டு சார் என கத்திக் கொண்டே சூர்யாவை தேட ஒரு இடத்தில் புற்று இருப்பதை பார்த்து அங்கு சென்று வேண்டுகிறாள். அப்போது புற்றிலிருந்து பாம்பு ஒன்று வெளியே வந்து மாரியை பின் தொடர்ந்து வருமாறு சொல்லி பாம்பு நகர்ந்து செல்கிறது.

மாரியும் பாம்புவை பின்தொடர்ந்து நடந்து செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

https://www.facebook.com/HTTamilNews 

https://www.youtube.com/@httamil 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி