தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காதல் தோல்வி.. சாக்லேட் பாய்ஸ் வேண்டாம் - நடிகை ஆத்மிகா ஓப்பன் டாக்!

காதல் தோல்வி.. சாக்லேட் பாய்ஸ் வேண்டாம் - நடிகை ஆத்மிகா ஓப்பன் டாக்!

Karthikeyan S HT Tamil

Mar 12, 2023, 01:58 PM IST

Actress Aathmika: காதல் தோல்வியினால் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன் என்று நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.
Actress Aathmika: காதல் தோல்வியினால் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன் என்று நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.

Actress Aathmika: காதல் தோல்வியினால் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன் என்று நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.

ஹிப் ஹாப் ஆதி எழுதி இயக்கிய 'மீசையை முருக்கு' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆத்மிகா. இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. அதன் பின்னர் 'கோடியில் ஒருவன்' படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து ‘காட்டேரி’, ‘நரகாசூரன்’ போன்ற படங்களிலும் நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Raavanan: கடினமாக இருந்த மணிரத்னம் படப்பிடிப்பு.. அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா! ராய்!

GV Prakash, Saindhavi: "ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும்.. இனியும் இது தொடரும்" - சைந்தவி போட்ட திடீர் போஸ்ட்!

Ilaiyaraja Symphony: 35 நாள்களில் சிம்பொனி இசை..! விடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த இளையராஜா

Lekha Washington: பாலிவுட் நடிகருடன் டேட்டிங்! ரெமாண்டிக் புகைப்படம் பகிர்ந்து ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்த லேகா வாஷிங்டன்

தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ஆத்மிகா நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாறன் இயக்கத்தில் சித்து குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். ஏற்கெனவே 'கண்ணை நம்பாதே' டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஆத்மிகா தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் நடிகை ஆத்மிகா கூறியது இதோ..காதல் தோல்வியினால் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன். நான் பிரேக் அப் பண்ணவில்லை. ஆனால், என்னை காதலித்தவர்தான் பிரேக் அப் செய்தார். அதற்காக தற்போது மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு ரக்கட் பாய்ஸூம் வேண்டாம் சாக்லேட் பாய்ஸூம் வேண்டாம். சாதரணமான நல்ல மனிதராக இருந்தால் போதும். பணமா புகழா இதில் எது முக்கியம் என்றால் பணம்தான் முக்கியம் என்பேன். ஏனெனில் அதுதான் எதார்த்தம்." என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி