தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kajal : குண்டாகி விட்டேன்.. குழந்தை மீது அக்கறை இல்லை.. காஜல் மீதான கேலியும், விமர்சனமும்.. அவர் கொடுத்த ப்ளிச் பதில்!

Kajal : குண்டாகி விட்டேன்.. குழந்தை மீது அக்கறை இல்லை.. காஜல் மீதான கேலியும், விமர்சனமும்.. அவர் கொடுத்த ப்ளிச் பதில்!

Divya Sekar HT Tamil

May 16, 2023, 11:58 AM IST

நான் கர்ப்பமாக இருந்தபோது குண்டாகி விட்டேன் என்று என்னை கேலி செய்தார்கள் என காஜல் அகர்வால் கூறியுள்ளார். (Instagram/@kajalaggarwalofficial)
நான் கர்ப்பமாக இருந்தபோது குண்டாகி விட்டேன் என்று என்னை கேலி செய்தார்கள் என காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

நான் கர்ப்பமாக இருந்தபோது குண்டாகி விட்டேன் என்று என்னை கேலி செய்தார்கள் என காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

தமிழ் , தெலுங்கு மொழிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகையாக வலம் வருவபர் காஜல் அகர்வால். இவர் தனது நீண்டகால நண்பரான கௌதம் கிட்ச்லுவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இந்த ஜோடிக்கு 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதியினர் தங்கள் மகனுக்கு நீல் கிட்ச்லு என்று பெயரிட்டு உள்ளனர். தொடர்ந்து காஜல் அகர்வால் தனது மகனின் படங்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், "நான் கர்ப்பமாக இருந்தபோது குண்டாகி விட்டேன் என்று என்னை கேலி செய்தார்கள். என் மகன் நீல் பிறந்த சில மாதங்களிலேயே திரும்பவும் படப்பிடிப்புக்கு சென்றேன். அப்போதும் குழந்தையை விட்டு விட்டு இப்படி நடிக்க போகலாமா? குழந்தை மீது அக்கறை இல்லை என என்னை கேலியும், விமர்சனமும் செய்தார்கள்.

யார் என்ன நினைத்தாலும் மகனுக்குத்தான் என் முதல் முக்கியத்துவம். முதல் முறையாக அவனை மார்போடு அணைத்தபோது நன்றாக வளர்க்க முடியுமா என்று பயந்தேன். ஆனால் எல்லாவற்றையும் மெல்ல மெல்ல கற்றுக்கொண்டு என்னை சரி செய்து வருகிறேன். தினமும் காலையில் மகனை விட்டுவிட்டு படப்பிடிப்புக்காக செல்லும்போது என் மனம் அவ்வளவு வேதனைப்படும்.

அதற்காக அவனை அலட்சியம் செய்கிறேன் என்று அர்த்தம் அல்ல. நீலுக்காக நேரத்தை ஒதுக்கி கொள்வதும், அவனுக்கு அன்பை பகிர்வதும், அவன் நல்லது கெட்டது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு என் பணியையும் பார்த்துக்கொள்கிறேன். என் மகன் முன் நான் ஒரு பலமான தாயாக நிற்க ஆசைப்படுகிறேன்'' எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி