தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ar Rahman:சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துவதில்லை?காரணம் சொல்லி வருந்திய Arr!

AR Rahman:சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துவதில்லை?காரணம் சொல்லி வருந்திய ARR!

Feb 09, 2023, 02:26 PM IST

சென்னையில் இசைக்கச்சேரிகளை நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். (ar rahman instagram)
சென்னையில் இசைக்கச்சேரிகளை நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

சென்னையில் இசைக்கச்சேரிகளை நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தற்போது சிலம்பரசன் நடிப்பில், இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பத்து தல’, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் கமல்ஹாசனின் 234 ஆவது படத்திற்கும் இசையமைக்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Ilaiyaraaja: ரஜினி நடிக்கும் ‘கூலி’படத்தில் தனது இசை உரிமைக்காகப் போராடும் இளையராஜா - பதிப்புரிமைச் சட்டம் சொல்வது என்ன?

Dhanush Divorce Bad Luck: தனுஷை சுற்றும் விவாகரத்து துரதிர்ஷ்டம்.. உடன் பணியாற்றியவர்களை காலி செய்த கொடூரம்

Mysskin Vs Parthiban: உடைந்த பனிப்போர்.. 'ஐயா நான் அப்படி சொல்லல’.. இயக்குநர் பார்த்திபனிடம் பம்மிய மிஷ்கின்!

GV Prakash Saindhavi: தமிழர் மாண்பு எங்க போச்சு.. அத்துமீறி நுழைறீங்க... செருப்படி பதில் கொடுத்த ஜிவி!

ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் லிஸ்டில் ஒரு பக்கம் பல படங்கள் இருந்தாலும், வெளிநாடுகளிலும் உள்ளூர்களிலும் இசைக்கச்சேரிகளை நடத்துவது அவரது வழக்கமாக இருக்கிறது. இந்த இசைக்கச்சேரிகளில் ஏராளமான அவரது ரசிகர்கள் கலந்து கொள்வார்கள். டிக்கெட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்து விடும். 

இந்த நிலையில் இவர் அடுத்ததாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சியானது வருகிற மார்ச் 7 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது தொடர்பான போஸ்டை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் ‘இங்கு சென்னை என்ற நகரம் ஒன்று இருக்கிறது.. உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஏ. ஆர்.ரஹமான் ‘அனுமதி, அனுமதி, அனுமதி... அனுமதி கிடைக்கவே மாத கால ஆகி விடுகிறது ” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி