தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amudhavum Annalakshmiyum : பணத்தால் வந்த பிரச்சனை.. அன்னம் போட்ட கண்டிஷன்.. கலங்கி நிற்கும் அமுதா!

Amudhavum Annalakshmiyum : பணத்தால் வந்த பிரச்சனை.. அன்னம் போட்ட கண்டிஷன்.. கலங்கி நிற்கும் அமுதா!

Divya Sekar HT Tamil

Jun 13, 2023, 11:51 AM IST

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து காண்போம்.
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து காண்போம்.

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து காண்போம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

நேற்றைய எபிசோடில் சிதம்பரம் உயிர் பிழைக்க பஞ்சாயத்தில் அனைவரது காலிலும் விழ போன அன்னத்தை அமுதா தடுத்து நிறுத்திய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அன்னம் அமுதாவிடம் சம்பள பணம் கேக்க, அமுதா அப்பாவிடம் நான் பணம் தந்துவிட்டேன் அப்பா கல்யணத்துக்கு நிறைய செலவு பண்ணி இருக்காரு அவருக்கு செய்ய வேண்டியது நம்ம கடமை என்று சொல்ல அன்னம் ஷாக் ஆக பிறகு அன்னம் அமுதா வாக்குவாதம் ஏற்படுகிறது.

பூசாரி வீட்டுக்கு வந்து அமுதா அம்மா நேர்த்திக்கடன் பண்ணனும்னு சொல்லிருந்தாங்க, பூசைக்கு காசு வாங்கிட்டு போலாம்னு வந்தேன் என சொல்ல அன்னம் கோவில் செலவுக்கு பணம் தர அதை பார்த்த அமுதா அன்னமிடம் அத்தை இதுக்கு தான் பணம் கேட்டீங்களா? நான் நகையை வச்சி பணம் எடுத்துட்டு வந்துருக்கேன் என்று சொல்லி பணம் தர, அன்னம் பணத்தை வாங்க மறுக்கிறாள். இதனால் அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

அதோடு அன்னம் கோபமாகி அமுதா எந்த வேண்டுதலும் செய்ய கூடாது. அவள் என்னை மதிக்கவில்லை நான் சொன்னதை அவள் கேட்கவில்லை, என் பையனுக்கு நான் தான் செய்வேன், அவள் எந்த பரிகாரமும் செய்ய கூடாது என்று சொல்ல. அமுதா சோகமாகிறாள்.

பிறகு அமுதா அத்தை நானும் பரிகாரம் பண்ணுவேன் நானும் வேண்டியிருக்கேன், அது மட்டும் இல்ல இந்த வயசுல உங்களால இந்த பரிகாரம் பண்ண முடியாது என்று சொல்ல. அன்னம் tension ஆகிறாள். அமுதா எனக்கு எல்லாம் தெரியும் நீ இந்த பரிகாரம் பண்ண கூடாது என்று சொல்ல..அமுதா feel பண்ண செந்தில் அமுதாவை சமாதானம் செய்கிறான்.

அமுதா நானும் வேண்டி இருக்கேன் எதாவது பிரச்சனை வருமோன்னு பயமா இருக்கு என்று சொல்லி feel பண்ண செந்தில் அமுதாவிடம் அதல்லாம் எதுவும் வராது விட்டு விடு என்று சொல்லிவிட்டு போகிறான்.

அதை தொடர்ந்து அனைவரும் கோவிலுக்கு கிளம்ப ரெடியாக அமுதா சோகமாக அமர்ந்து இருக்க அனைவரும் அவளை விட்டு விட்டு கிளம்பி செல்கின்றனர். இதை வைத்து வடிவேல் அமுதாவை கிண்டல் செய்ய அவள் கண் கலங்குகிறாள்.

அதன் பின்னர் அமுதா கதிரேசன் போட்டோ முன் வந்து வேண்டிக்கொண்டு இருக்க, அமுதா நான் பரிகாரம் பண்ணும்மா இல்ல வேண்டாமா நீங்கதான் சொல்லணும் என்று சொல்ல வடிவேலு அவளை நக்கல் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி