தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Nayanthara: முதல்முறையாக குழந்தைகளின் முகம்..இன்ஸ்டா உலகிற்கு வந்த நயன்தாரா!

Actress Nayanthara: முதல்முறையாக குழந்தைகளின் முகம்..இன்ஸ்டா உலகிற்கு வந்த நயன்தாரா!

Karthikeyan S HT Tamil

Aug 31, 2023, 11:37 AM IST

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என புகழப்படும் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என புகழப்படும் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என புகழப்படும் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளார்.

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, பிரபல சமூல வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் வர் நடித்த “சந்திரமுகி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, அவர் தொடந்து நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன. ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார் நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன் இணைந்து ப்ளாக்பஸ்டர் படம் தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக புகழப்பட்டார்.

நாயகர்களுக்கு சமமாக பெண் கதாப்பாத்திரங்களை மையமாக கொண்ட கதைகளில் அவர் நடித்த, 'மாயா', 'அறம்', 'கோலமாவு கோகிலா' போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் படங்களாக வெற்றி பெற்றன. நாயர்களுக்கு இணையாக நயன்தாராவிற்கென தனி மார்க்கெட் உருவானது. அனைவராலும் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டார் நயன்தாரா. சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகின் முடிசூடா ராணியாக விளங்கி வருகிறார் நயன்தாரா.

தற்போது பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் ஜோடியாக 'ஜவான்' படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் பிரமாண்ட பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள 'ஜவான்' வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

தற்போது தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார் நயன்தாரா.

உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர். இன்ஸ்டாவில் தன்னுடைய முதல் பதிவாக, தனது இரட்டை குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஒரு அறையில் இருந்து வெளியே வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பின்னணியில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ‘அலப்பறை கெளப்புறோம்’ பாடல் ஓடுகிறது. மேலும் அதில் ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற கேப்ஷனும் இடம் பெற்றுள்ள

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி