தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Soori Speech:விஜய் சேதுபதி மாமா.. காலைத்தொட்டு கும்புடுறேன்! - கண்கலங்கிய சூரி!

Soori Speech:விஜய் சேதுபதி மாமா.. காலைத்தொட்டு கும்புடுறேன்! - கண்கலங்கிய சூரி!

Apr 06, 2023, 02:32 PM IST

உங்கள் காலைத்தொட்டு கும்பிடுகிறேன் என நடிகர் சூரி பேசியிருக்கிறார்
உங்கள் காலைத்தொட்டு கும்பிடுகிறேன் என நடிகர் சூரி பேசியிருக்கிறார்

உங்கள் காலைத்தொட்டு கும்பிடுகிறேன் என நடிகர் சூரி பேசியிருக்கிறார்

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது விடுதலை திரைப்படம். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து உள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். கதையின் நாயகனாக சூரி நடித்து இருக்கிறார். வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!

Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?

இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். 30 -03-2024 அன்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரம் சிலர் விடுதலை படம் குறித்தான தங்களது விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகையாளர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.

இதில் கலந்து கொண்ட சூரி பேசும் போது, “ படம் வெளியான பின்னர் இப்படியான ஒரு நிகழ்வு மிகவும் அரிதாகவே நிகழும். என்னுடைய வாழ்க்கையில் இது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

விடுதலை திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றித்திரைப்படமாக்கியதற்கு மிகவும் நன்றி. இந்த படத்திற்கான ஒட்டு மொத்த ஹீரோ வெற்றிமாறன் அண்ணன்தான். அவருக்கு மிகப்பெரிய நன்றி. அவர்தான் இங்கு ஹீரோ. வெற்றிமாறன் என்னுடைய குடும்பத்திற்கு ஒரு மிகப்பெரிய ஆல்பத்தை ரெடி செய்து கொடுத்து விட்டார்.

நிறைய பேர் போன் செய்து தங்களுடைய வாழ்த்துக்களை சொன்னார்கள். நேற்று இரவு 3.30 மணிக்கு கோவிந்தன் என்பவர் போன் செய்து மாமா சூப்பராக நடித்து இருக்கிறாய்.. உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்.. தற்கொலை கூட செய்கிறேன் என்றார்.. அவர் தொடர்ந்து போன் செய்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் டேய் நீ உயிர எடுக்குறடா; உயிரை கொடுக்கிற மாதிரி இல்ல.. சந்தோஷம் டா தயவு செய்து என்னை விட்டு விடுடா” என்றேன்.

நடிகர் சூரி

நான் எதிர்பார்க்காத அரசியல் தலைவர்களிடம் இருந்து அவ்வளவு போன் கால்கள் வந்தன.

விஜய்சேதுபதி மாமா.. உனக்கு இருக்குற பக்குவம்.. யார் யாருக்கு எந்தெந்த இடத்துல முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உன்னிடம் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டும். ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு எல்லா விஷயங்களையும் கற்றுக்கொடுத்தாய்.

இசை வெளியீட்டு விழாவில் கூட, நான் பேசியதற்கு பின்னர் நீ மிகவும் குறைவாக பேசி.. இது அவனுக்கான இடம் நல்லா இருக்கட்டும் என்றும் சென்றாய்.. நீ நல்லா இருக்கணும்.. என்று சொல்லும் போதே.. சூரி கண்கலங்கினார். தொடர்ந்து ரசிகர்களை பற்றி பேசிய அவர் உங்கள் காலைத்தொட்டு கும்பிடுகிறேன்” என்றார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி