தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aadi Tulasi Worship: ஆடி மாத வளர்பிறை துளசி வழிபாடு - பலன்களைக் கொட்டும் பெருமாள்!

Aadi Tulasi Worship: ஆடி மாத வளர்பிறை துளசி வழிபாடு - பலன்களைக் கொட்டும் பெருமாள்!

Jul 25, 2023, 10:47 AM IST

ஆடி மாத வளர்பிறை நாட்களில் தினமும் துளசியை வழிபட்டு வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
ஆடி மாத வளர்பிறை நாட்களில் தினமும் துளசியை வழிபட்டு வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

ஆடி மாத வளர்பிறை நாட்களில் தினமும் துளசியை வழிபட்டு வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

அம்மனுக்கு உரிய மாதமாக விளங்கக் கூடிய ஆடி மாதத்தில் மகாவிஷ்ணுவுக்கு மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்படக் கூடிய சுக்லபட்ச துவாதசி மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

இறைவனின் மாதமாகக் கருதப்படும் இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய சுக்லபட்ச துவாதசி திருநாளில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்த காரியம் அனைத்தும் நடக்கும் என்பது ஐதீகமாகும்.

முதலில் வரக்கூடிய தேவ சயனி ஏகாதசி திருநாளில் துயில் பயிலத் தொடங்குவார். அதன் பின்னர் நான்கு மாதங்களுக்குப் பிறகு வரும் பிறபோதின் ஏகாதேசி தினத்தில் தான் கண் விழிப்பார் எனக் கூறப்படுகிறது. அப்படிச் சிறப்பு வாய்ந்த தேவசயணி ஏகாதசி திருநாளன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படக்கூடிய இக்கட்டான சூழ்நிலைகளில் தப்பிக்கக்கூடிய வலிமை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

துளசி வழிபாடு

ஆடி மாதத்தில் செய்யக்கூடிய துளசி வழிபாடு எண்ணில் அடங்கா பலன்களைக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை நாட்களில் தவறாமல் தினமும் துளசி வழிபாடு செய்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

சுக்லபட்ச துவாதசி திதி திருநாளில், காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டில் விளக்கு ஏற்றி, பெருமாள் படத்தை அலங்காரம் செய்துவிட்டு, பின்னர் அவருக்குத் துளசி மாலை சாற்ற வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒழிக்கக் கேட்டு பெருமாளை வழிபட வேண்டும்.

மறக்காமல் துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். தயிர்ச் சாதம் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்ய வேண்டும். சுக்ல பட்ச ஏகாதசி திருநாளிலும், மறுநாள் வரக்கூடிய துவாதசி திருநாளிலும் பெருமாளை வழிபாடு செய்யலாம்.

விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு பெரும்பாலும் திருநாமங்களைக் கூறி அவருக்குத் துளசி அர்ச்சனை செய்யலாம். ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கோபத்ம விரதம் கடைப்பிடிப்பது அதீத பலன்களைக் கொடுக்கும்.

இந்த நாளில் பசுமாட்டைப் பெண்கள் வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது அதிகமாகும். அதேபோல் ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்குப் பால் ஊற்றி பூஜை செய்து வழிபாடு செய்தால் ஜாதகத்தில் இருக்கக்கூடிய நாக தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது முன்னோர்களின் வாக்கு.

ஏகாதசி திருநாளன்று புளியோதரையும், துவாதசி திருநாளன்று தயிர்ச் சாதமும் பெருமாளுக்கு நெய் வைத்தியம் செய்து வழிபாடு செய்யலாம். இந்த நாளில் கொடுக்கக்கூடிய அன்னதானமானது நமது பலன்களை இரட்டிப்பாக மாற்றும் என்பது ஐதீகமாகக் கூறப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி