தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tirupathi : திருப்பதி ஒருநாள் உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க!

Tirupathi : திருப்பதி ஒருநாள் உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil

May 13, 2023, 12:29 PM IST

திருப்பதியில் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதியில் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தால் திருப்பதி கோயில் எப்போதும் நிரம்பி வழிந்தபடியே காட்சியளிக்கிறது.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது கோடை விடுமுறையால் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், கடந்த 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி 2023 ஜனவரி மாதம் வரை 10 மாதங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் ரூ. 1,275 கோடி 31 லட்சம், கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 2023ஆம் ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியில் ரூ. 123 கோடி 7 லட்சம் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.114 கோடியே 12 லட்சம் கிடைத்துள்ளது.

லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்னப்பிரசாதம் பெற்ற பக்தர்களின் எண்ணிக்கை 42.64 லட்சம். தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 9.03 லட்சம் ஆகும். நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 853 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள கல்யாணக்கட்டாக்களில் 33 ஆயிரத்து 381 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி