தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Flower: ஐஸ்வர்யம் பெருக காலையில் எந்த பூக்களை பார்க்கலாம் தெரியுமா?

Flower: ஐஸ்வர்யம் பெருக காலையில் எந்த பூக்களை பார்க்கலாம் தெரியுமா?

Jun 12, 2023, 11:34 AM IST

காலை எழுந்தவுடன் செடி முழுவதும் பூத்துக்குழுங்கும் நித்தியக்கல்யாணி மலர்களை பார்ப்பது மிகவும் விசேஷம். இந்த நித்தியக்கல்யாணி செடியை வீட்டில் வளர்ப்பது தினமும் நல்லது நடக்க உதவும் என கூறப்படுகிறது.
காலை எழுந்தவுடன் செடி முழுவதும் பூத்துக்குழுங்கும் நித்தியக்கல்யாணி மலர்களை பார்ப்பது மிகவும் விசேஷம். இந்த நித்தியக்கல்யாணி செடியை வீட்டில் வளர்ப்பது தினமும் நல்லது நடக்க உதவும் என கூறப்படுகிறது.

காலை எழுந்தவுடன் செடி முழுவதும் பூத்துக்குழுங்கும் நித்தியக்கல்யாணி மலர்களை பார்ப்பது மிகவும் விசேஷம். இந்த நித்தியக்கல்யாணி செடியை வீட்டில் வளர்ப்பது தினமும் நல்லது நடக்க உதவும் என கூறப்படுகிறது.

பொதுவாக நமக்கு ஒரு நாள் நல்ல விஷயங்கள் நடந்தால் காலையில் எழுந்தவுடன் யார் முகத்தை பார்த்தோமோ அந்த ராசிதான் காரணம் என்று நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அதேபோல் சமயத்தில் நாம் விரும்பத்தகாத ஒரு விஷயம் நடந்தால் இன்றுக்கு யார் முகத்தில் முழிச்சோமோ என்னு அங்கலாய்ப்பதும் உண்டு. ஆனால் இது மனிதர்கள் மட்டும் அல்ல நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்கள், ஏன் பூக்களிலில் கூட இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை . ஒரு சில விஷயங்களை காலையில் பார்பது நம் நல்வாழ்விற்கு உகந்தது என நம்ப படுகிறது. அது எந்த மாதிரியான பொருட்கள் விஷயங்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உள்ளங்கை பார்த்தல்

காலை எழுந்த உடல் உங்கள் உள்ளங்கைகளை பார்ப்பது மகாலட்சுமியின் ஆசி கிடைக்க வழி வகுக்கும்

நாணயங்கள் பார்த்தல்

காலை எழுந்தவுடன் குவித்து வைக்கப்பட்டுள்ள நாணயங்களை பார்ப்பது மிகவும் நல்லது. அது நாள்முழுவதும் பணத்தட்டுப்பாடு இல்லாமல் நம்மை வைத்துக்கொள்ளும். காலப்போக்கில் வாய்பிருந்தால் தங்கம், வெள்ளி நாணயங்களை பார்ப்பது ஐஸ்வர்யம்பெருக உதவும்.

மஞ்சள் குங்குமம் சந்தனம் பார்த்தல்

காலையில் மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றை பார்ப்பது நாள் முழுவதும் மங்கல செய்திகளை கேட்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.

மலர் பார்த்தல் - நித்தியக்கல்யாணி

காலை எழுந்தவுடன் செடி முழுவதும் பூத்துக்குழுங்கும் நித்தியக்கல்யாணி மலர்களை பார்ப்பது மிகவும் விசேஷம். இந்த நித்தியக்கல்யாணி செடியை வீட்டில் வளர்ப்பது தினமும் நல்லது நடக்க உதவும் என கூறப்படுகிறது. நாள் முழுவதும் சுபிக்ஷம் தர உதவும். உங்கள் வாழ்வில் முக்கியமான காரியங்களுக்க செல்லும் போது நித்திய கல்யாணியை உடன் கொண்டு செல்வதால் தடைகள் நீங்க உதவும் என்று கூறப்படுகிறது.

சங்குப்பூ

மிக மிக சக்தி வாய்ந்த ஒரு பூ. மகாவிஷ்ணுக்கு பிடித்த பூ. மகாலெட்சுமிக்கு மிகவும் உகந்த பூ. சனீஸ்வர பகவானுக்கு மிகவும் பிடித்த கருநீல சங்குப்பூவில் காலை எழுந்தவுடன் கண்விழிப்பதால் சோதனைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.

பசுந்தாவரங்கள்

பசுமை நிறைந்த தாவரங்களை பார்ப்பது கண்களுக்கு குளிர்ச்சி தரும். அது நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக உணரச் செய்து மனதிற்கு இதம் தரும். அது மட்டும் இல்லாமல் அன்று முழுவதும் நமக்க நல்ல விஷயங்கள் நடக்க அது உதவும்

கண்ணாடி

காலையில் எழுந்தவுடன் சிரித்த முகத்துடன் கண்ணாடி பார்ப்பது மிகவும் விஷேசமாக பார்க்கப்படுகிறது. இதுவும் அன்றைய நாளில் நமக்கு நன்மை சேர உதவும். 

வானம் பார்ப்பது

காலையில் எழுந்த உடன் வானம் பார்ப்பது பெரும் நன்மை பயக்கும். அதிகாலையில் பிரபஞ்சத்தை பார்த்து நம் கவலைகளை பகிர்ந்து கொள்வது நமக்கு நல்லது நடக்க உதவும் என கூறப்படுகிறது. 

குழந்தை முகம் பார்ப்பது

காலையில் எழுந்தவுடன் கள்ளங்கபடங்கள் அற்ற குழந்தைகளின் முகத்தை பார்ப்பது மிகவும் விசேஷம். குழந்தையை போன்ற துன்பங்கள் அற்ற நாளாக அன்றைய நாள் அமைய உதவும்.

குல தெய்வ விழிபாடு

அதிகாலையில் எழுந்து குல தெய்வங்களை பார்ப்பதும் வழிபடுவது பெரும் நன்மை தரும். குல தெய்வ புகைப்படம் இருந்தால் அதைப்பார்ப்பது விஷேமாகும். நம்காரியங்கள் வெற்றியடைய அது உதவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி