Paramakudi Murder : பரமக்குடியில் பரபரப்பு.. கெத்து காட்டுவதில் பிரச்னை.. இளைஞர் சரமாரி வெட்டி கொடூர கொலை!
நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் இளைஞர் கத்தியால் குத்தி பீர்பாட்டிலால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சியை சேர்ந்தவர் ஹரிஷ் என்ற (21). இவரது நண்பர் அபிபாலன் (21). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு சில நண்பர்களுக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இருப்பினும் ஒன்றாக பழகி வந்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் சம்பவத்தன்று பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் வழக்கம்போல் இருதரப்பினரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் யார் கெத்து என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். ஹரிசும், அபிபாலனும் அந்த பகுதியில் நின்றிருந்தனர். அப்போது சில அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகராறு முற்றியதில் அவர்கள் கத்தி மற்றும் பீர் பாட்டில்களால் ஹரீசை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த ஹரீஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடனிருந்த அபிபாலனையும் மர்ம நபர்கள் பீர்பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பரமக்குடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த அபிபாலனை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஹரீஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அபிபாலன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையில் சில நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் இளைஞர் கத்தியால் குத்தி பீர்பாட்டிலால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.