தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nammakal Murder : தகாத உறவு.. ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக் கொலை.. நாமக்கல்லில் பகீர்!

Nammakal Murder : தகாத உறவு.. ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக் கொலை.. நாமக்கல்லில் பகீர்!

Divya Sekar HT Tamil
Jul 04, 2023 09:08 AM IST

நாமக்கல்லில் நள்ளிரவில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்லில் இளைஞர் வெட்டிக்கொலை
நாமக்கல்லில் இளைஞர் வெட்டிக்கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக அப்பென்ணுக்கும், அவரின் கணவருக்கும் தகராறு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் சீனு உடனான உறவு குறித்து அப்பெண் தனது சகோதரி மகன் பிரவீன்குமாரிடம் தெரிவித்து வருத்தம் அடைந்துள்ளார்.

இதனால் பிரவீன் சீனுவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கோவை விமான நிலைய பணிக்கு சீனுவுக்கு அழைப்பு வந்துள்ளது. எங்கே தனது தாய்மாமனின் மனைவியை உடன் அழைத்துச் சென்றுவிடுவானோ? என்ற பயத்தில் இருந்த பிரவீன் நேற்று இரவு 1 மணி அளவில் மது போதையில் சீனுவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சீனுவை மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீன்குமார் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சீனு ரத்தம் சொட்ட சொட்ட தன்னை காப்பாற்றுமாறு கதறி துடித்தபடி அப்பெண்ணின் வீட்டை நோக்கி ஓடியுள்ளார். ஆனாலும் பாதி வழியிலேயே சீனு ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்து வேலக்கவுண்டன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனுவின் உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்