Trichy Suicide : கள்ளகாதலனுடன் ஓடிய மனைவி.. ரயில் முன் பாய்ந்து கணவர் தற்கொலை!
மனைவி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளகாதலனுடன் ஓடியதால் மனமுடைந்த கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி : லால்குடி அருகே மாந்துரை, நெடுஞ்சாலைகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி நித்யா என்ற மனைவியும், ஏழு வயதில் ஒரு மகளும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ராஜா உள்ளூரில் வேலை பார்த்து குடும்ப வருமானம் போதாததால் அவ்வப்போது வெளியூர்களுக்கும் வேலைக்கு சென்று தங்கியிருப்பது வழக்கம். மேலும் ராஜாவின் மனைவி நித்யா திருச்சியில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வருகிறார் அப்போது அங்கு வேலை செய்யும் திருச்சி வடக்கு அரியாவூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது.
இருவரும் நெருக்கமாக இருந்தது வந்துள்ளனர். இந்த விஷயம் ராஜாவுக்கும் தெரிய வந்தததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், நித்யா கள்ளகாதலனுடன் பேசுவதை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ராஜா லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வந்துள்ளனார்.
இந்நிலையில் கடந்த வாரம் நித்தியா தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜா, வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து ராஜா மேலவாளாடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில் அவரது உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன. இது தொடர்பாக தகவல் அறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
டாபிக்ஸ்