Pa.Ranjith vs VCK: ‘இயக்குநர் பா.ரஞ்சித் நம்பத்தகுந்தவர் கிடையாது!’ விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு சீற்றம்!
ஒரு சினிமாவில் நுழையும் அசிஸ்டெண்ட் டைரக்டர், ரஞ்சித்தை பார்த்து நான் உங்களை கைவிடமாட்டேன் என்று சொல்வது எப்படி இருக்கும். பா.ரஞ்சித் யார்?, அவர் கைவிடுவதற்கு. உங்கள் உயரம் என்ன என்பதை தெரிந்துவிட்டு பேச வேண்டும்.

இயக்குநர் பா.ரஞ்சித், நம்பத்தகுந்த நபர் கிடையாது என விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு விமர்சனம் செய்து உள்ளார்.
பாஜக, அதிமுகவை விமர்சிக்காதது ஏன்?
தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் போது எங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் எங்கு சென்றோம். இரங்கல் கூட்டம் நடத்த மாநகராட்சி ஆணையரிடம் எங்கள் தலைவர் திருமாவளவன் பேசினார். ஆம்ஸ்ட்ராங் படுகொலையை பயன்படுத்தி பா.ரஞ்சித் தனது செயல்பாட்டை கொண்டு வர நினைக்கிறார்.
பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுக வழக்கறிஞர் மலர்கொடி, தாமக பொறுப்பாளர் ஹரிஹரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பா.ரஞ்சித் நடத்திய பேரணியில், பாஜக, அதிமுகவுக்கு தொடர்பு உள்ளதா என அவர் கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். ஆனால் அதில் கூட அங்கு திமுகவைதான் விமர்சிக்கிறார். இதில் அரசியல் நோக்கம் உள்ளது. இதில் பா.ரஞ்சித்துக்கு ஒரு நோக்கம் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும்.