அரசியல் அவதாரம் எடுக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி! பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமனம்! இனி தான் ஆட்டமே ஆரம்பம்!
வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்த்தை நியமனம் செய்து அக்கட்சித்தலைமை உத்தரவு பிறப்பித்து இருந்தது. பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் பதவியை ஏற்க சொல்லி பொற்கொடியிடம் அக்கட்சித் தலைமை கோரிய நிலையில், அதனை அவர் ஏற்க மறுத்தார். இந்த நிலையில் அவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை அக்கட்சித் தலைமை வழங்கி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.