Madurai Accident : வேன் கவிழ்ந்து விபத்து.. 20 க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!
மதுரையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.
மதுரை : மேலூர் அருகே உள்ள கிரமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவர்கள் தினமும் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் மூலம் வேலைக்கு சென்று வந்தனர். இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. வள்ளாளப்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து விபத்து தொடர்பாக மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்