தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Crime : ஆசை ஆசையாக வளர்த்த மகள்.. மேக்கப் போட்டு விட்டு கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. காரணம் என்ன?

Chennai Crime : ஆசை ஆசையாக வளர்த்த மகள்.. மேக்கப் போட்டு விட்டு கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. காரணம் என்ன?

Divya Sekar HT Tamil
Aug 26, 2023 11:03 AM IST

சென்னையில் கடன் தொல்லையால் ஆசை ஆசையாக மகளை கழுத்தை நெரித்து கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகளை கொன்ற தந்தை
மகளை கொன்ற தந்தை

ட்ரெண்டிங் செய்திகள்

கீதா கிருஷ்ணன், அயனாவரம் சுப்பராயன் தெருவில் உள்ள தனது வீட்டை லட்சுமிபதி என்பவருக்கு குத்தகைக்கு கொடுப்பதாக கூறி ரூ.2.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை வாங்கிய கீதா கிருஷ்ணன், லட்சுமிபதிக்கு வீட்டையும் கொடுக்காமல், வாங்கிய பணத்தை திருப்பியும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில் கீதா கிருஷ்ணன் நேரில் பார்த்து பணத்தை கேட்பதற்காக லட்சுமிபதி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. வீட்டின் உள்ளே கீதா கிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து லட்சுமிபதி அயனாவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கீதா கிருஷ்ணன் தூக்கில் பிணமாகவும், அவருடைய மகள் மானசா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது.

கீதா கிருஷ்ணன் தனது மகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் 2 பேர் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக 2005-ம் ஆண்டு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த கல்பனா என்பவரை கீதா கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டு கோட்டூர்புரத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு குணாலி ஸ்ரீ மற்றும் மானசா என்ற 2 மகள்கள் பிறந்தனர். ஆனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவர்கள், 2020-ம் ஆண்டு குடும்பத்துடன் தற்கொலை செய்ய தீர்மானித்தனர். இதில் கல்பனாவும், மூத்த மகள் குணாலி ஸ்ரீயும் உயிரிழந்தனர்.

ஆனால், திடீரென மனம் மாறியகீதா கிருஷ்ணனின் தற்கொலை முடிவைக் கைவிட்டு, இளைய மகள் மானஸாவுடன் தலைமறைவானார். பின்னர் கீதா கிருஷ்ணனை கோட்டூர்புரம் போலீசார் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அடுத்த சில மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்த கீதாகிருஷ்ணன், தனது 2-வது மகளுடன் அயனாவரத்தில் உள்ள இந்த வீட்டில் குடியேறினார்.

அதன்பிறகும் கடன் தொல்லையால் கீதா கிருஷ்ணன் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தற்கொலை முடிவுக்கு வந்த கீதாகிருஷ்ணன் தான் ஆசை ஆசையாக வளர்த்த மகள் மானசாவை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்து கொண்டார். இதில் சோகம் என்னவென்றால் மகள் மானசாவுக்கு அலங்காரம் செய்து கொலை செய்துள்ளார். மகளின் உடல் மீது பட்டு புடவையை போர்த்தி விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்