Annamalai: ’நெஞ்சை உலுக்கும் கும்பகோணம் சம்பவம்! கஞ்சா தலைநகரமாக மாறிய தமிழ்நாடு!’ விளாசும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை!
’நெஞ்சை உலுக்கும் கும்பகோணம் சம்பவம்! கஞ்சா தலைநகரமாக மாறிய தமிழ்நாடு!’ விளாசும் அண்ணமலை!

கும்பகோணத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கும்பகோணத்தில் அரசுப்பேருந்து நடத்துடனரை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கிய சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரை பகுதியில் நேற்றைய முன் தினம் இரவு பந்தலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து கொன்று வந்து கொண்டு இருந்தது.
அந்த பேருந்தில் ஓட்டுநர் ரமேஷும், நடத்துனர் செந்தில் குமாரும் இருந்தனர். அந்த அரசுப்பேருந்து பால்லகரை அருகே வந்த போது சாலையின் நடுவே இளைஞர்கள் பைக்கில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஓட்டுநர் ரமேஷ் ஹாரன் அடித்த நிலையில் இளைஞர்கள் நகராததால் அரசுப்பேருந்து அவர்கள் மீது உரசி சென்றதாக கூறப்படுகிறது.