Tenkasi :தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பாமக பெண் நிர்வாகி.. போலீசார் விசாரணை!
தென்காசியில் தண்டவாளத்தில் பாமக மகளிர் அணி நிர்வாகி சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி : சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்தையா-சண்முகத்தாய் (70) தம்பதி. இவர்களது மகள் மாரியம்மாள். மாரியம்மாள் குருவிகுளம் யூனியன் பாமக மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
மாரியம்மாள் கணவரை விட்டு பிரிந்து ரெங்கசமுத்திரத்தில் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்தபோது மாரியம்மாள் வீடு பூட்டி இருந்தது. நீண்ட நேரமாக மாரியம்மாள் வீடு பூட்டியே இருந்ததால் அக்கபக்கத்தினர் அவரது தாய்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது மாரியம்மாள் என்பது உறுதியானது. மேலும் அவரது உடல் அருகே அவரது இருசக்கர வாகனமும் நின்றது.
இதையடுத்து மாரியம்மாள் சாவில் மர்மம் இருப்பதாக சண்முகத்தாய் சங்கரன்கோவில் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருவிகுளம் யூனியன் பாமக மகளிர் அணி தலைவி தண்டவாளத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்