Student: தேர்வுக்கு ஏன் படிக்கல? - தாய் கண்டித்ததால் மகள் எடுத்த விபரீத முடிவு
விக்கிரவாண்டி அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர்கள் குமரன்( 43 ) , சரளா தம்பதி . இவருக்கு 17 வயதில் கயல்விழி என்ற மகள் இருந்து உள்ளார். குமரன் கூலி தொழில் செய்து இவர் தனது மகளை வளர்ந்து வந்து உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கயல்விழி திருக்கனுாரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்து உள்ளார். இவர் பொது தேர்வில் மூன்று தேர்வுகளை எழுதிய உள்ளார். கயல்விழி நேற்று தேர்வு இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது அவரின் தாயார் ஏன் மற்ற தேர்வுக்கு படிக்கவில்லை என கேட்டு கயல்விழியை கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த கயல்விழி நேற்று பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கிய நிலையில் இருந்த அவரை உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பு
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம். மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
டாபிக்ஸ்