Armstrong Murder: ’ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை!’ பகுஜன் சமாஜ் புதிய தலைவர் ஆனந்தன் பரபரப்பு பேட்டி!
Armstrong Murder Case: இதற்கு மூளையாக ஒருவர் செயல்பட்டு உள்ளார். ஆற்காடு சுரேஷ் என்பவரின் கொலைக்கு எதிராக இந்த கொலை நடந்ததாக காவல்துறை கமிஷனர் பேட்டி கொடுத்தார். ஆற்காடு சுரேஷ் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தவர். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் உடன் அவருக்கு விரோதம் கிடையாது.

Armstrong Murder: ’ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை!’ பகுஜன் சமாஜ் புதிய தலைவர் ஆனந்தன் பரபரப்பு பேட்டி!
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ள வழக்கறிஞர் ஆனந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பகுஜன் சமாஜ் கட்சியில் பதவி என்பது கிடையாது. மிகப்பெரிய பொறுப்பு. மறைந்த தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இந்த இயக்கத்தை முன்னெடுக்க அவரின் ரத்தத்தை சிந்தி இருக்கின்றார்.
வெகுஜன் மக்கள் இயக்கமாக எடுத்து செல்வோம்
ஆம்ஸ்ட்ராங் அண்ணன் நடத்தும் நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் பேர் வரை வருவார்கள். ஆனால் வாக்குகளை வெவ்வேறு கட்சிகளுக்கு செலுத்துவார்கள். பகுஜன் சமாஜ் கட்சி கொள்கை என்பது அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து வெகுஜன இயக்கமாக எடுத்து செல்வோம்.
இது ஒரு ’தலித் இயக்கம்’ என்று மீடியாக்கள் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இது அனைத்து மக்களுக்கான கட்சி. அண்ணன் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து எடுத்து செல்வோம்.