தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Mother Commits Suicide In Salem

Salem :டேய் இப்படி பண்ணாதீங்க.. விரக்தியில் தாய்.. அரளி விதையை குடித்து தற்கொலை!

Divya Sekar HT Tamil
Feb 21, 2023 01:31 PM IST

Salem Suicide: கெங்கவல்லியில் மகன்கள் மதுபோதையில் தகராறு செய்ததால் வேதனையில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

 தற்கொலை
தற்கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் தெய்வானை தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நல்லதம்பி, செந்தில் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.மேலும் இருவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனக் கூறப்படுகிறது.

அண்ணன் தம்பி இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு தகராறு செய்து கொண்டு வந்துள்ளனர். இதனால் தாய் தெய்வானை மன உளைச்சலில் இருந்துள்ளார். கணவரை பறிகொடுத்த நிலையில் மகன்களும் இப்படி குடித்துவிட்டு தகராறு செய்வதால் தெய்வானை மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மதுபோதையில் வந்த இருவரும் மீண்டும் தகராறு செய்துள்ளனர். தெய்வானை அவர்களை டேய் சண்டை போடதீங்க என்று சொல்லி சமாதானப்படுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் சண்டையை நிறுத்தாமல் இருவரும் தெய்வானையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தெய்வானை அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் கெங்கவல்லி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்