தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Namakkal: பள்ளி மாணவியை சீரழித்த 65 வயது முதியவர் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Namakkal: பள்ளி மாணவியை சீரழித்த 65 வயது முதியவர் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Karthikeyan S HT Tamil
May 18, 2023 10:32 AM IST

Namakkal: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 65 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோப்புபடம்
கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளியைச் சேர்ந்தவர் வீரமுத்து (65). இவர் அப்பகுதியில் உள்ள விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

மேலும், சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமுத்துவை கைது செய்தனர். 

இந்த வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று அவ்வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் வீரமுத்துவிற்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதம் கட்டத்தவறினால் 6 மாதம் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு போலீசார், முதியவரை கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்