தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Maharashtra Crane Accident : மகாராஷ்டிரா கிரேன் விபத்து - தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

Maharashtra Crane Accident : மகாராஷ்டிரா கிரேன் விபத்து - தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

Divya Sekar HT Tamil
Aug 01, 2023 11:28 AM IST

மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் உயிரிழந்த 16 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா கிரேன் விபத்து
மகாராஷ்டிரா கிரேன் விபத்து (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

தானே அருகே நடைபெற்று வரும் கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் ஷாபுர் என்ற இடத்தில் கட்டப்பட்டுவரும் பாலத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் எனப்படும் ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் திடீரென அந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 16 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். 

உயிரிழந்த 16 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். 

சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்