Crime: தோழிகள் உதவியுடன் மாணவியைச் சீரழித்த கேரளா இளைஞர் - இன்ஸ்டா காதல்..!
கேரளா இளைஞர் ஒருவர் தோழிகள் உதவியுடன் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள காலடி என்னும் பகுதியில் வசித்து வருபவர் அஜின் சாம். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் தமிழ்நாடு களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் நெருக்கமாகப் பழகி உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று அஜின் சாம் தனது பெண் தோழிகளான ஸ்ருதி, பூர்ணிமா உள்பட ஐந்து பேருடன் களியக்காவிளைக்கு வந்துள்ளார்.
பின்னர் அந்த மாணவியை அழைத்துக் கொண்டு அனைவரும் தமிழ்நாடு கேரள எல்லையான நெய்யாற்றின் கரைக்குச் சென்று சுற்றித்திரிந்துள்ளனர். அவருடன் இரண்டு பெண்கள் இருக்கின்ற காரணத்தினால் அந்த மாணவி தைரியமாகச் சென்றுள்ளார்.
அதற்குப் பிறகு அங்கு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து அனைவரும் தங்கியுள்ளனர். பின்னர் தனி அறையில் அஜின் சாமும், மாணவியும் தங்கி உள்ளனர். மாணவி மறுப்பு தெரிவித்தும் பலமுறை அஜின் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ஒரு நாள் முழுக்க விடுதியில் தங்கி இருந்து பின்னர் மறுநாள் மாணவியை அனைவரும் வீட்டில் விட்டு விட்டுச் சென்றுள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சடைந்த பெற்றோர், பாறசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் காவல் துறையினர் அஜின் சாமை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர் இந்த மாணவி மட்டுமல்லாது இதுபோல பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இவரோடு சேர்ந்து நண்பர்களான அகிலேஷ், ஜிதின், சுருதி, பூர்ணிமா என அனைவரும் இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பின்னர் அஜின் சாம் உள்பட ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த கும்பல் பெண் பிள்ளைகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையையும் செய்துள்ளனர்.