TN Budget 2024: தமிழ்நாடு பட்ஜெட் 2024.. முக்கிய அம்சங்கள் என்னென்ன? - முழு விபரம் இதோ..!
தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டின் அதன் முக்கிய அம்சங்கள் இதோ..!
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழக அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவுப்புகளின் தொகுப்பு இதோ..!
ட்ரெண்டிங் செய்திகள்
- அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.
- தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
- முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.
- ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
- கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.
- கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.
- சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
- சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
- 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.356 கோடி ஒதுக்கீடு.
- 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு.
- முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
- நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.
- சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
- சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு.
- சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
- மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு.
- அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு.
- சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு.
- 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்; கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்படும்.
- கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
- வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்
- சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு.
- வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
- பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
- சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு.
- மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்.
- தஞ்சையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சிப்காட் பூங்கா அமைக்கப்படும்
- தூத்துக்குடியில் 2ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும்.
- ரூ.2483 கோடி மதிப்பில் விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
- தமிழகத்தில் மருத்துவகட்டமைப்பை மேம்படுத்த ரூ. 333 கோடி நிதி ஒதுக்கீடு.
- மதுரை , திருச்சியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும்.
- தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைக்கப்படும்.
- சிறு குறு நடுத்தர தொழில்துறைக்கு ரூ.1557 கோடி நிதி ஒதுக்கீடு.
- கல்லணை கால்வாய் புனரமைப்பு பணிக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
டாபிக்ஸ்