MR Vijayabhaskar Arrest:100 கோடி நில மோசடி வழக்கு! கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
தனது அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால முன் ஜாமீனை தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வந்தார்.

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.
100 கோடி நிலமோசடி வழக்கு
கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
முன் ஜாமின் மனு தள்ளுபடி
இந்த புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நில மோசடி வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே தன் மீதான வழக்குக்கு முன் ஜாமீன் கேட்டு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.